Tuesday, March 31, 2009

எனது எண்ணங்கள்

நானும் பல தலைப்பை பற்றி விவாதித்து எழுத ஆசை ஆனால் அதற்கு ஏற்ற அறிவு நம்ம கிட்ட இல்லைங்க. இந்த போஸ்ட் முழுக்க நடைமுறை தமிழில்தான் இருக்கும். இது என்னோட வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சி னு சொல்றத விட விவாதம் என்றே சொல்லலாம்.

நான் விவாதித்த இரண்டு விஷயங்களை இங்க சொல்ல உள்ளேன்.

ஒன்று, சாப்ட்வேர் வேலை செய்யற மக்களை பத்தி,

இன்னொரு விஷயம் தமிழ் பாதுகாக்க பட்ட விதத்தை, நான் மத்தவங்க கிட்ட சொன்ன கருத்தை சொல்ல போறேன்.

அன்னைக்கு அரக்கோணம் லிருந்து ஈரோடு வரைக்கும் ரயில் பயணம். ஒரு 5 மணி நேர பயணம் என்னடா பண்றதுன்னு உக்காந்து இருந்தேன். எனக்கு பக்கத்துல ஒரு 60 வயசு பெரியவரு அவரோட கல்யாணம் ஆனா பொண்ணோட உக்காந்து இருந்தாரு. பக்கத்துல வயசான தம்பதி இருந்தாங்க.

முதல்ல பெரியவுங்க ரெண்டு பெரும் வழக்கம் போல கவர்மென்ட் பத்தி பேசிட்டு வந்தாங்க. அப்புறம் அப்படியே சாப்ட்வேர் பத்தி பேசு மாறிச்சு. ரெண்டு பெரும் சென்னை மக்கள்.

பெரியவர் 1: "இந்த சாப்ட்வேர் மக்கள் தொல்ல தாங்க முடியல. அவுங்க ஏதோ காசு வாங்குராங்கனு சென்னைல இருக்கிற வீட்டு வாடகையெல்லாம் ஏத்தி விட்டுடாங்க. அவுங்கனால தான் நம்ம ஊர்ல பாதி பிரச்சனை ", சொல்லி முடிச்சாரு.

பெரியவர் 2 : "ஆமாங்க அதே தான்" என்று ஆமாம் சாமி போட்டார்.

நான் : "சார், மன்னிச்சுக்கோங்க!, நீங்க பேசும் போது குறுக்க பேசுறதுக்கு. நானும் ஒத்துக்குறேன் சாப்ட்வேர் மக்கள் வாடகை ஏத்துனாங்க அதுக்கு காரணமே நீங்க எல்லாரும் தான்!" என்று மெதுவா சொன்னேன்.

பெரியவர் 2: "எப்படி தம்பி சொல்ற சும்மா சொல்லாத", என்றார் .

நான் : "சார், நான் ஏன் சொன்னேன் தெரியுமா? நாங்க எல்லாம் வேலைக்கு சிட்டிக்கு வந்த உடன ப்ரெண்ட்ஸ் ஓட தான் தங்கணும். பிரம்மச்சாரிய தான் இருப்போம். போய் வீடு கேட்டா யார் உடனே தருவா? உங்களுக்கெல்லாம் வீடு தர முடியாது. இது தான் பதில் வரும். அப்புறம் நாங்க வாடகை எவ்வளவு நாளும் சரி சொன்ன ஒத்துக்குவாங்க. இப்படி எல்லாரும் ஏத்துனாங்க. எங்களுக்கும் மட்டும் என்ன சம்பளத்தை எல்லாம் வாடகையா கொடுக்க அசையா " என்றேன்.

ரெண்டு பெரும் ஒரு நேரத்துல நீ சொல்றது சரி தம்பி என்றனர்.

இப்படி அவுங்க கூட நல்ல பேசவே அடுத்த விவாததுக்கு என்னையும் இழுத்தாங்க.

பெரியவர் 1 : "தம்பி இந்த தமிழ்நாட்டு பசங்க தான் வெளிய போய் கஷ்படுறாங்க ஹிந்தி தெரியாம கரெட்டா ", என்றார்.

நான் : "ஆமாம் சார் " என்றேன்.

பெரியவர் 2 : "எப்போ ஹிந்தி ரெண்டாவுது மொழியா எடுத்து படிக்கரமோ அப்போ தான் தமிழ்நாட்டு பசங்க உருபடுவாங்க" என்று ஏங்கினார்.

நான் : "சார் அப்படி இல்ல ஹிந்தி ரெண்டாவது மொழி எடுத்து படிச்சா தமிழ் தான் அழிஞ்சு போகும் டியுசன் போய் படிக்கலாம் சார் " என்றேன்.

பெரியவர் 1 : "நீ எப்படி தம்பி சொல்ற அதெல்லாம் ஒன்னும் இல்ல " என்றார் .

நான் : "சார் உங்க தாய் மொழி என்ன ?" என்றேன்.

பெரியவர் 1 : "சௌராஷ்ட்ரா " என்றார்.

நான் : "இப்போ பார்தீங்கனா வட நாட்ல என்ன மொழின்னு சொன்ன நமக்கு ஹிந்தி மட்டும் தான் நியாபகத்துக்கு வரும். ஆனா இந்தியா ல இருக்கிற 18 மொழில ஹிந்தி மட்டும் தான் தெருஞ்சு இருக்கு . உங்க மொழிய உங்க வீட்டுல பேசுறீங்க ஆனா ஒரு 4 தலைமுறை கழிச்சு அத பேசுறது கொஞ்சம் கஷ்டம் எல்லாரும் இரண்டாவுது மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. இந்தியாவுக்கு தேசிய மொழி அப்படி ஒன்னும் இல்ல, ஆங்கிலம் மாதிரி தான் ஹிந்தி யும். ஏதோ ஒண்ணுமே தெரியாத கம்ப்யுட்டர் ல இருக்கிற மொழி படிக்குறோம் தேவை படும் போது ஹிந்தியும் படிச்சுகுறோம் சார் . இப்போ கத்துகாம எப்போ கத்துக்க போறோம். சும்மா இப்போ ஜாலியா இருக்க தமிழ் மறந்துட்டு. தமிழ் அழிக்குறது நியாயம் இல்லை" என்றேன் .

பெரியவர் 1: நான் சொல்வது சரி என்பது போல் தலை அசைத்தார்.

பெரியவர் 2: கண்டிப்பா தமிழை அழிய விடமாட்டேன் என்பது போல் பார்த்தார் .

எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் தமிழை வளர்த்துவிட்ட பெருமிதம் என்னுள் .

அது மட்டும் இல்ல சாப்ட்வேர் மக்கள் மேல் இருந்த களங்கம் துடைத்த மகிழ்ச்சி.

Friday, March 13, 2009

பயணத்தின் பயன்

ஜெய், ரொம்ப ஜாலியான பையன். அவனுக்கு, எது சரின்னு படுதோ அத செய்ய ஆசைப்படுற டைப். அடிக்கடி ரயில்ல பயணம் பண்ணுவான். அந்த அசதி தெரியாம இருக்க சரக்கு அடிச்சுபான்.

அப்ப‌டி தான் ஒரு நாள் அவனோட ஊர்ல இருந்து அவன் வேலை பாக்குற ஊருக்கு புறப்பட்டான். காலைல டிராவல், அதுனால சரக்கு அடிகுல. ஆனா பெப்சி பாட்டில்ல மிக்ஸ் பண்ணி வெச்சுகிட்டான்.

ஸ்டேஷன் வந்தவுடனே ரிசர்வேஷன் சார்ட்ல எதாவுது தேறுமான்னு பார்த்துகிட்டு இருகாரு. அதாங்க F20 ல இருந்து F26 வரைக்கும், பயபுள்ள சைட் அடிக்க தான். அவனுக்கு ராசி சரி இல்லை சார், அப்படி ஒண்ணுமே இல்ல.

அவனோட ராசி அவனோட கம்பர்ட்மென்ட்ல ஒரு கை குழந்தையோட ஒரு தம்பதி இருந்தாங்க. ஆனா குழந்தையோட அழகு ஜெய் நல்ல கவர்ந்துடுச்சு.

அந்த குழந்தை பண்ற சேட்டையெல்லாம் பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தான். அப்போ கணவன் மனைவி ரெண்டு பேரும் ஜன்னல் ஓர சீட்ல இருந்தாங்க. ஜெய் வெளில உள்ள அழக ரசிக்க கொஞ்சம் நேரம் கதவு பக்கம் போயிட்டு அங்க நின்னு ஒரு பத்து நிமிஷம் ரசிச்சுகிட்டு இருந்தான்.

அவனோட சீட்டுக்கு போகும் போது அங்க பக்கத்துல ஒருத்தர் தம் அடிச்சுட்டு இருந்தாரு, "யாருங்க ரூல்ஸ் கேக்குறா". அந்த நாத்தம் அவன் மேலையும் இருந்துச்சு. அதுனால அந்த தம்பதி நம்ம ஜெய்ய‌ ரொம்ப கேவலமா பார்த்தாங்க. ஜெய் கொஞ்ச யோசிச்சான், அப்புறம் அத பெருசா எடுதுகுல. அவனுக்கு எதுவும் புரியல.


அப்போ அந்த கை குழந்தை அழுதது அந்த அம்மாவுக்கு வேற வழி இல்ல . ஆம் ஒரு குட்டி கவிதை நியாபகம் வந்தது. "அழும் குழந்தைக்கு தெரியாது தன் தாய் படு சங்கடம், தான் அழும் போது". ஆம் தன் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க சங்கடத்துடன் திரும்பினாள்.


அப்போது ஜெய் ஒன்னும் தெரியாதவன் போல் அவன் வைத்து இருந்த புக் எடுத்துக் கொண்டு கதவின் பக்கம் சென்றான். ஒரு 20 நிமிஷன் கழிச்சு அவன் இருக்கைக்கு வந்தான்.நல்ல வேலை இப்போ யாரும் தம் அடிகுல.


அந்த தம்பதி இவனை ஒரு நன்றியுடன் பார்த்தனர். ஆனால் அதை ஜெய் கண்டுகொள்ளவில்லை. அவனது புக்கை புரட்டி கொண்டிருந்தான். அவனது பயணம் சுமார் பத்து மணி நேரம் தொடர்ந்தது. குழந்தை சுமார் இரண்டு மூன்று முறை இடம் தெரியாது அழுதது. ஜெய் சிறிதும் சங்கடப்படாமல் குழந்தை அழுகும் போது கதவின் பக்கம் சென்று விட்டான்.


அந்த தம்பதி ஜெய் இறங்கும் ஸ்டேஷனுக்கு முந்தைய ஸ்டேஷன்ல இறங்கினர். வண்டி நின்றதும் அவர்கள் இறங்கும் முன் அக்குழந்தையின் தாயும் தந்தையும் ஜெய்யின் முகம் பார்த்து நன்றி சொன்னார்கள். அவனுக்கு என்ன சொல்றது தெரியாம கொஞ்சம் நேர யோசனைக்கு சென்றான். வண்டி புறப்பட்டது சன்னல் வழியாக அக்குழந்தைக்கு கை அசைத்தான்.

அவன் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி வேறொரு வண்டி பிடிக்கணும் அதில் அடிப்பதற்கு பெப்சி பாட்டில்ல வைத்திருந்த சரக்கை சன்னல் வழியாக வீசி எறிந்தான் சற்று தெளிவு பெற்ற மனநிலையுடன் இறங்கி அடுத்த வண்டி ஏறினான்.


இவனை அறியாமலே இவன் அறிவு பெற்றான். ப‌ய‌ண‌த்தில் ப‌ய‌ன் அடைந்தான்.

Sunday, March 1, 2009

என்னவென்று சொல்வது?

அன்பு , இளமாறன் , அருள் , ஸ்ரீகாந்த் நாலு பேரும் தோஸ்த். ஒன்னா வேலை செய்றாங்க. இவுங்க நாலு பேரையும் என்னனு சொல்லுவாங்க தெரியுமா?

இத கொஞ்சம் லேட்டா பார்ப்போம்.

"அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை",

இந்த பாட்டு பாடியது அன்புவின் மொபைல் ஆமா அவரோட ரிங்க்டோன்.

"சொல்லுடா, அருள் நீ ரெடியா?" என்றான் பரபரப்புடன்.

"அன்பு, நான் இடத்துக்கு முன்னாடி தான் நிக்குறேன் ஸ்ரீகாந்தும் இளமாறனும் இன்னும் இரண்டு நிமிஷத்துல வந்துடுவாங்க நீயும் சீக்கிரம் வ‌ந்தா கரெக்டா இருக்கும்", அருள் அன்புவிடம் அவுங்க ப்ளான் பத்தி சொல்லிட்டு இருந்தான்.

"மச்சி நான் பக்கத்துல வந்துட்டேன் இப்போ வண்டில இருந்து இற‌ங்குறேன்", என்று சொல்லிக் கொண்டே நடந்து வந்து அருள் முதுகை தட்டி,

"என்ன மச்சி எல்லாம் ரெடியா ?" என்று பரபரப்புடன் ராயல் பாரின் வாச‌ல் முன்பு நின்றனர்.

ஆமாங்க, இவுங்கா நாலு பெரும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பாக்குறாங்க.

நாலு பேரையும் "வெட்டி பசங்கன்னு" அவுங்களே சொல்லிக்குவாங்க.

இன்னைக்கு சனிக்கிழமை அதான் பயலுங்க சரக்கு அடிக்க பிளான் போட்டு நடத்துறாங்க.

இளமாறனும் , ஸ்ரீகாந்தும் வந்ததும், "மச்சி, சரக்கு அடிக்க இவ்ளோ பில்ட் அப் தேவையா ?" என்றதும்.

"எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் தெருஞ்சுக்கோ" என்றான் அருள்.

"டேய் அடிக்குறதுக்கு முன்னாடி தத்துவமா வாங்கடா போலாம்" என்று எல்லாரையும் வழிநடத்தினான் அன்பு.

ஒரு டேபிள் பிடிச்சு நாலு பேரும் உக்காந்து ஆர்டர் ஸ்டார்ட் பண்ணிடாங்க.

"4 லார்ஜ் ராயல் சாலெஞ் வித் சோடா அப்புறம் 2 ப்ளேட் சிக்கன் மஞ்சுரியன் கொஞ்சம் சீக்கிர‌ம் கொண்டுவாங்க " என்று முடித்தான் அன்பு.

சரக்கு வந்தது சோடா கலந்து சியர்ஸ் சொல்லி அடிக்க ஸ்டார்ட் பண்ணியாச்சு.
....
கிரிகெட் பத்தி பேச்சு நடந்தது . மச்சி இந்த தோனிக்கு செம லக் என்று ஸ்டார்ட் பண்ணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் செம டீம் இப்போ என்று சென்றது விவாதம்.
முதல் ரவுண்ட் முடிஞ்சது.
..........
இப்போ அருள் "ஆர்டர் ரிபிட் பண்ணுங்க டிரிங்க்ஸ் மட்டும் சிக்கன் வேண்டாம்" என்றான்.
..........
இப்போ ஆஸ்கர் பத்தி நடந்தது. மச்சி ரெஹ்மான் வாய்ப்பே இல்லடா சூப்பர் , ஆனா அவருக்கு இந்த அவார்ட் லேட்டு , அவராவுது சரி, நம்ம ராஜா சார் பாவம் என்று சென்றது .
..........

இரண்டாவது ரவுண்ட் முடிஞ்சது.
..........
"ஆர்டர் ரிபிட் பண்ணுங்க வித் 1 ப்ளேட் சிக்கன்" என்றான் இளமாறன்.
..........
"மச்சி , அந்த சுவாதி கிட்ட பேசுனியா? என்ன தான் சொல்றா உன்ன இப்படி சுத்த விடுறா ? என்ன நினைச்சுகிட்டு இருக்கா ? ரெண்டுல ஒன்னு கேட்டுடு , அன்பு" என்று மப்பில் பாச மழை பொழிந்தான் அருள் .

"ஆமாம்டா எதுக்கு டைம் வெஸ்ட் பண்ற பூவா தலையா போட்டு பார்த்துடுவோம் என்ன சொல்ற" ,
"யாருடா இது? என்று மப்பில் அன்பு தலை நிமிர்த்தி பார்த்தான்" வேற யாரு நம்ம இளமாறன் தான்.

"என்னடா ஸ்ரீகாந்த் நீ எதுவும் சொல்லுல " என்றதும் .

"ஆர்டர் ரிபிட் பண்ணுங்க டிரிங்க்ஸ் மட்டும் சிக்கன் வேண்டாம்" என்றான் அங்க சிரிப்பு வெடி தான் போங்க.

சரக்கு வந்து "இது தான் மச்சி லாஸ்ட் ரவுண்ட் ப்ராமிஸ் பண்ணிட்டு " அடிச்சாங்க .

"டேய் டேய் அன்பு மெதுவா குடிடா ஏன் அவசரம் "

"இத எப்படி ரசிச்சா குடிக்க முடியும் போடா"

"பில் கொடுவாங்கா ப்ளீஸ்", என்று கச்சேரி முடிய போறத சொன்னான் இளமாறன்.

"மச்சி நேத்து வரேன்னு சொல்லிட்டு அவ என்ன ஏமாத்திட்டா, அவல சும்மா விட கூடாது" என்று புலம்ப ஆரம்பிச்சான் அன்பு .

"அள்ளுங்க‌டா அவன", சொல்லிட்டு அப்படியே ரூமுக்கு தள்ளிட்டு வந்தாச்சு.

"மச்சி இப்பவாவுது பேசட்டுமா "

"அன்பு பேசு ஆனா அளவா பேசு ரொம்ப பேசி எங்க மப்ப இறக்காத" என்றான் அருள்.

"மச்சி போன மீட்டிங்ல பார்த்து பேசிட்டு மெசஞ்சர்ல சேர்த்தேன்"

"அப்புறம் அப்போ அப்போ காபி ஷாப் போவோம் , கிப்ட் கொடுத்தேன்"

"நாதேறி எனக்கு எதாவுது வாங்கி கொடுத்து இருக்கியா " என்றான் ஸ்ரீகாந்த்.


"மச்சி என்னடா இப்படி சொல்லிட்ட உன்ன பிரிச்சு பாக்க விரும்புல "

"டேய் ஸ்ரீகாந்த் கொஞ்சம் சைலெண்டா இரு நீ சொல்லுடா அன்பு " என்றான் இளமாறன்.


"அப்புறம் டா ஒரு நாள் நைட்டு சாப்பிட கூபிட்டா நான் அப்போ தான் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு இருந்தேன் இவ கூப்பிடதுக்கு நான் போயி சாப்பிட்டேன் டா "

"இப்படியே சாபிடு 34 பேன்ட் 36 ஆயிடும் டா பாத்துக்கோ"


"நீ மேல சொல்லு அன்பு ", என்றான் அருள் .

"அவளுக்கு பல தடவ கோடிங் பண்ணி கொடுத்திருக்கேன் டா"


"சரி அதுக்கு இப்போ என்ன "


"இல்ல டா இப்படி அவளுக்கு தேவையானத பார்த்து பார்த்து செய்து இருக்கேன் டா "


"சரி அதுக்கு "


"போன வாரம் டா டிஸ்கொதே போலாம் வரியா கேட்டேன் டா அவளும் சரினு சொன்னா டா "


"அடபாவி அதான் போன வாரம் எங்க கூட வர மாட்டேன் சொன்னியா "


"இருடா புல்லா சொல்றேன் , சரி டிஸ்கோதே முன்னாடி வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் அவ அவளோட பாய் ப்ரெண்டோட வந்து இறங்கி ஷாக் கொடுத்தா மச்சி "


"ஷாலினி இப்படி பண்ணுவானு எதிர்பாகுல டா "


"டேய் அன்பு மப்புல ஒளராத அது ஷாலினி இல்ல சுவாதி டா "


"இல்ல மச்சி இது ஷாலினி தான் சுவாதி இல்ல "


"டேய் அப்போ சுவாதி "


"அது போன மாசம் இது இந்த மாசம் "


"டேய் நீ க‌ல‌ட்டிவிடுல‌ அவுங்க‌ தான் உன்ன‌ க‌ல‌ட்டி விடுறாங்க‌"


"ந‌ம்ம‌ எல்லாம் சிங்க‌ம் டா",


"அதுக்கு",


"சிங்கிளா தான் இருப்போம்",


"எவ்ளோ நாள்?, ஆள் சிக்க‌ வ‌ரைக்கும்", என்று சொல்லி க‌வ‌லைக‌ள் ம‌ற‌ந்து சிரித்து, க‌விழ்ந்த‌ன‌ர் ந‌ம் சிங்க‌ங்க‌ள்.


----------------சுபம் ------------------------------


இது சும்மா ஒரு ஜாலிக்காக சந்தோசமா இருக்க தான் போஸ்ட் பண்ணினேன் . இதில் வரும் அனைத்தும் கற்பனை தான். நீங்களே எதுவும் கற்பனை பண்ண வேண்டாம் . இந்த மொக்கைனு பீல் பண்ணினா நான் எதுவும் பண்ண முடியாது அதுக்கு தான் எழுதினேன்.