Friday, April 17, 2009

யாசகம் பலவிதம் - பகுதி 2


ரோஷினி சிவாவை சந்தித்ததை கேட்டு சற்று அதிர்ச்சியும் ஆர்வமும் கொண்டாள் ஷாலினி.

பின்ன இருக்காதா? இரண்டு வருட தூய நட்பு. சிவா தான் நடப்பை கொச்சை படுத்தி விட்டதாக உள்ள குற்ற உணர்வை போக்கவே பேச வேண்டாம் என்றாள். சிவா மீது எந்த ஒரு வருத்தமும் இல்லை.

அதன் பிறகு அவளுக்கு சிவாவை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

ஆம், சந்தோஷத்துடன் திருமணம், பிறகு ஆக்சிடென்ட், சந்தோஷிற்கு கண் பார்வை போனது, இப்படி பல திருப்பங்களுடன் சற்றே சோகத்துடன் நகர்ந்தது.

"ரோஷி, சிவா எப்படி பா இருக்கான் எங்க பார்த்த அவனை ?", என்றாள் ஷாலினி ஆவலுடன்.

சற்றே மௌனம் காத்தாள் ரோஷினி.

"ஹே கேக்குறேன் ல சொல்லுபா ஏன் இப்படி சைலெண்டா இருக்க சொல்லுடி ?" என்று ஆர்வத்தை கூட்டினாள் ஷாலினி.

சிவாவை ஹாஸ்பிடலில் பார்த்ததையும் அதன் காரணத்தையும் ஷாலினி கிட்ட விளக்கி சொன்னாள் ரோஷினி.

"இப்படி நடக்கும்னு நெனச்சு கூட பாக்குலபா , அவன் வேற காலேஜ் போய் படிக்குறான் அப்படி தானே நெனச்சேன் ஆனா இப்படி போய்ட்டான் , கேட்கவே கஷ்டமா இருக்கு பா " என்று ஏங்கினாள் ஷாலினி.

"இதுக்கு தான்டி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நெனச்சேன் நான் ஒரு ஓட்ட வாய் சாரி டி " என்றால் ரோஷினி.

"ஹே ரோஷி நீ என்ன பண்ணின, இதுல என்ன இருக்கு அவன் என்ன சொன்னான் ? அவன் என்ன பத்தி கேட்டானா ?" என்றாள் ஷாலினி.

"ஒருத்தன் உங்கள பத்தி நெனச்சா பறக்க ஆரம்பிச்சுடுவீங்களே !" என்று சற்றே கிண்டல் அடித்தாள் ரோஷினி.

"ஹே அப்படி இல்லபா ஸ்டில் ஹி இஸ் மை ப்ரெண்ட் அதான் கேட்டேன்" என்றாள் ஷாலினி.

"ஹே கூல் டவுன் பேபி", "ஐ ம் கெளன்டிங் மை டேஸ்" என்றான் சிவா இத தான்டி அவன் என்கிட்டே சொன்னான் என்றாள் ரோஷினி.

இதை கேட்டதும் ஷாலினி சற்றே வாடினாள். "எவ்ளோ நாள் இருப்பான்?", என்றாள் ஷாலினி அக்கறையுடன்.

"இன்னும் ஒரு வாரம் இருந்தாலே பெருசு பா கொஞ்சம் நிலைமை மோசம் தான் ", என்றாள் ரோஷினி.

அவ‌ளால் கண்ணுல வர தண்ணி நிறுத்த முடியல ஏன்னா சிவா எல்லாரோடையும் அன்பா தான பழகினான். கொஞ்ச நாள் பழகினாலும் யார்கிட்டயும் கெட்ட பேர் இல்ல.

ஷாலினியும் அழ தொடங்கினாள்.

ரோஷினி பேச்சை தொட‌ர்ந்தாள்.

"நான் உன்கிட்ட சொன்னதுக்கு முக்கிய காரணம் நான் அவன பார்த்துட்டு வெளிய வரும் போது வார்ட் பாய் அவனோட கண் டொனேட் சர்டிபிகேட் கொடுத்தான் சோ ஹி இஸ் ரெடி டு டொனேட் ஹிஸ் ஐஸ் , நீ ஏன் அத சந்தோஷ்க்கு கேட்க கூடாது ?" என்று வினா வைத்தாள் ரோஷினி.

"நான் எப்படி டி இதன வருஷம் பாக்காம இப்ப மட்டும் எப்படி போய் கேக்குறது ? எனக்கு அந்த தைரியம் இல்ல அதுவும் சாகுறதுக்கு முன்னாடியே எப்படி என்னால முடியாதுபா ?" என்று தயங்கினாள் ஷாலினி.

"இங்க பாரு ஷாலு ஒருத்தன் செத்ததுக்கு அப்புறம் தன் கண் உயிரோட இருக்க போகுதுனா சந்தோச படுவாங்கடா நீ கேக்குறதுல தப்பு இல்ல " என்று தேற்றினாள் ரோஷினி.

சுமார் ஒரு முப்பது நிமிஷம் பேசி ஷாலினி சிவாவை பார்க்க சம்மதிக்க வைத்தாள் ரோஷினி.

சிவாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றனர் ஷாலினியும் ரோஷினியும்.

ஷாலினி வந்ததும் சிவா சற்றே பரபரப்பானான். இன்னும் ஒரு வாரத்தில் உயிர் பிரிய போவதை மறந்தான். ஆம் அதை நினைத்து இந்த நிமிசத்தை அவன் வேஸ்ட் பண்ண விரும்புல.

ஷாலினியும் சிவாவும் மனம் விட்ட பேச கால் வராத அவளோட போன் எடுத்துட்டு வெளியே போய்ட்ட ரோஷினி. 15 நிமிஷம் கழிச்சு உள்ள வந்து, "என்ன சிவா என்ன முடிவு சொல்ல போற? டெசிஷன் உன்னோடது" என்றாள் ரோஷினி.

டென்ஷன் ஆ பார்த்தான் சிவா அவனுக்கு ஒன்னும் புரியல.

"நான் சிவா கிட்ட‌ அத பத்தி கேக்கவே இல்ல கேட்குற‌ தைரிய‌ம் இல்ல‌" என்று சொல்லி அழுது கொண்டே வெளியே சென்றாள்", ஷாலினி.

என்ன ஆச்சு ரோஷினி ?" என்று திகைப்புடன் கேட்டான் சிவா.

"சிவா என்னை தப்பா நினைக்காத ஷாலினி வேண்டாம்னு சொன்ன நான் தான் இத கேட்க சொன்னேன் ஆனா இப்போ அவளால முடியல", என்று இழுத்தாள் ரோஷினி .

"ரோஷினி என்னனு தெளிவா சொல்லு என்ன கொளப்பாத யோசிகுற நிலைமைல நான் இல்ல " என்றான் சிவா.

"உன்னோட டெத்க்கு அப்புறம் அப்புறம் "

"அப்புறம் என்ன ரோஷினி ?"

"உன்னோட கண்ண சந்தோஷுக்கு டொனேட் பண்ணனும் " என்று முடித்தாள் ரோஷினி.

சொல்லி முடித்ததும் சிவா மூஞ்சில அப்படி ஒரு சந்தோஷம், பேரானந்தம் , மகிழ்ச்சி . இத்தனை வார்த்தை சொல்லியும் அவனோட ஆனந்ததை வெளிப்படுத்த முடியல.

ஏதோ இத்தன நாள் வாழ்ந்து காணாத சுகம் அடைந்த மகிழ்ச்சி . ஆம் அவன் "இன்னும் முப்பது வருஷம் வாழ போற " இப்படி சொன்ன கூட அவனோட முகத்தில அவ்ளோ சந்தோஷம் பாக்க முடியாது.

சந்தோசத்தில் ரோஷினி கிட்ட ஷாலினிய பத்தி சொல்ல ஆரம்பித்தான்,

உன்னை ம‌ட்டுமே க‌ண்டிருந்தேன்;
க‌ண்டிருக்க‌ ஆசை கொண்டேன்;
முடிய‌வில்லை;

நான் பூமியில் வாழ
கொடுத்து வைக்க‌வில்லை;
நீ என்னுட‌ன் இல்லாத‌ போது
நான் வாழ்ந்து என்ன‌ ப‌ய‌ன்?

உன் க‌ண‌வ‌னுக்கு என் க‌ண்ணை
யாசிக்க‌ வ‌ந்தாய்
கேட்க‌ உன்னால் முடிய‌வில்லை;

யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌வித‌ம்
நீ கேட்ட‌து அதுவ‌ல்ல‌,
என் நெஞ்சில் நிறைந்த‌ நீ
என் க‌ண்ணில் நிறைய‌ போகிறாய்
உன் க‌ண‌வ‌ன் உன்னை காண்ப‌தால்;

யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌விதத்தில்
நானும் யாசிக்கிறேன் ஆண்ட‌வ‌னிட‌ம்
என் உயிரை சீக்கிர‌ம் ப‌றிக்குமாறு!
இனி ஒரு போதும் பொறுக்க‌ மாட்டேன்
உன்னை காணாம‌ல்;

சொல்லி முடித்ததும் அதிக சந்தோஷத்தை தாங்க முடியாத சிவாவின் இதயம் நின்றது.

சந்தோஷிற்கு கண்கள் பொருத்தப்பட்டது.

ஷாலினி சந்தோஷ் இல்லறம் நல்லறம் ஆனது.

ஷாலினியும் சந்தோஷும் சிவாவின் முதல் பிறந்த நாளை தடபுடலாய் கொண்டாடினர்.

இந்த சிவா வேற யாரும் இல்ல ஷாலினி சந்தோஷின் மகன்.

இனி இவனுக்கு தோல்வி இல்லை.

பலவித பலரது யாசகத்தில் வந்தவன்.

------------------- முற்றும் --------------------------------

கண் தானம் செய்வோம்; உலகின் அழகை என்றென்றும் ரசிப்போம்;
நன்றி :)

Thursday, April 16, 2009

யாச‌க‌ம் ப‌ல‌வித‌ம் - ப‌குதி 1

"தயவு செஞ்சு என்னை டிஷ்டர்ப் பண்ணாத சிவா ப்ளீஸ்",

"என்னை மறக்க ட்ரை பண்ணு , இனிமேல் என் மூஞ்சில முழிக்காத"

இது தாங்க என் ஷாலு என்னை பார்த்து சொன்ன கடைசி வரிகள் என்று ராமிடம் விளக்கி கொண்டிருந்தான் சிவா.

"ஏன் சார் அதுக்கு அப்புறம் நீங்க உங்க ஷாலினிய பாக்கவே இல்லையா" என்றான் ராம்.

"இல்லைங்க அதுக்குள்ள என்னோட ஷாலு வேற ஒருத்தரோட திருமதி ஆனா நியூஸ் தான் எனக்கு வந்தது, ஏதோ ஒன்னு தொலைஞ்சு போன மாதிரி ஆயிடுச்சு அதான் இப்படி ஆயிட்டேன்" என்றான் சிவா.

"எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிடீங்க " என்று கலாய்த்து கொண்டே ,"சார் உங்க லவ் ஸ்டோரி கொஞ்சம் சொல்லுங்க" என்றான் ராம்.

"ரொம்ப சரி இப்படி ஆகிட்டேன் பாருங்க அடுத்தவன் லவ் ஸ்டோரி நாவே கிளுகிளுப்பு தான, சொல்றேன் சார்"

"அது ஓர் அழகிய பூ உதிர் காலம், வேகமா நடந்தா பூமிக்கு வலிக்குமோ, என்று மெல்ல பாதத்தை எடுத்து வைத்து வந்து கொண்டிருந்த போது என் தேவதை தரிசனம் கிடைத்தது".

"இப்படி உருகுவதற்கு நான் ரியல் ஹீரோ இல்ல சார் ரீல் தான்" என்றான் சிவா நிதானமாய்.

"உங்களுக்கு கொடுத்த பில்டப் போதும் உங்க கதை சொல்லுங்க பாஸ் " என்றான் ராம்.

"என்ன சார், உருகி உருகி லவ் பண்ணி இருக்கேன், கொஞ்சம் பில்டப் கொடுக்க கூடாதா? , சரி சொல்றேன் கேளுங்க"

"நான் என் தேவதைய என்னோட காலேஜ்ல தான் பார்த்தேன், பார்த்தவுடன முடிவு பண்ணிட்டேன். இவ தான் டா உனக்கு சரியான பொண்ணு விடாதடா சிவா, எனக்குள்ள மைன்ட் வாய்ஸ் வேற ஓடிட்டு இருந்துச்சு "

"நம்ம என்ன மன்மதனா?, ஸ்ரைட்டா லவ் சொல்ல, அது முடியாம முதல்ல ப்ர‌ண்ட் ஆனேன்"

"அப்படியே பழகி நல்ல திக் பிரெண்ட்ஸ் ஆனோம் என்னோட ஒவ்வொரு நிமிஷமும் அதில் நடந்த விஷயத்த தினமும் போன்ல பேசிப்போம். எங்க அப்பாகிட்ட காலேஜ்கே தெரியாத பீஸ் எல்லாம் வாங்கி போன் பில், கிப்ட் எல்லாம் கொடுத்தேன் அவளும் என் மேல நல்ல நட்ப்போட இருந்தாங்க, இப்படியே இரண்டு வருஷம் முடிய வந்தது" என்று தொடர்ந்து கொண்டிருந்தான் சிவா.

"சார் அப்போ இரண்டு வருஷம் பசங்க கூட பேசாம கடல மட்டும் போட்டு இருக்கீங்க, கடைசியா லவ் சொன்னீங்களா இல்லையா ?" என்று ஆர்வமாய் வினவினான் ராம்.

"சார் சும்மா சொல்லுல லவ் ரொம்பவே பவர்புல் அந்த ரெண்டு வருஷம் நட்புனு சொல்லிட்டு காதல் மறச்சு வெச்சு நொந்து போனேன். ஒரு சமயத்துல பைத்தியம் பிடிப்பது போல் ஆனது. சரி, காதல் சொல்லிடலாம் நெனச்சு அவகிட்ட சொன்னா அவ என்னை ஒரு உண்மையான நண்பனா தான் நெனச்சு இருந்தா , என்னோட காதல சொல்லி என்னோட நட்பை கொச்சை படுத்தி விட்டேன்" என்று புலம்பினான் சிவா .

"சார் நீங்க உங்க லவ் சொன்னதுக்கு அவுங்க என்ன சொன்னாங்க" என்று ஆர்வமானான் ராம் .

"நான் முன்னாடி சொன்னது தான் சார் "

"தயவு செஞ்சு என்னை டிஷ்டர்ப் பண்ணாத சிவா ப்ளீஸ், என்னை மறக்க ட்ரை பண்ணு , இனிமேல் என் மூஞ்சில முழிக்காத" இது தாங்க என்று ராமிடம் விளக்கி கொண்டிருந்தான் சிவா.

"இப்படி அவ சொன்னதுக்கு நான் தான் காரணம்,"

"என்னால அவள நட்பாய் பாக்க முடியல, நான் திருந்திற மாறி இல்ல, அதான் இப்படி பதில் சொன்னா, அதுக்கு அப்புறம் என்னால படிக்க முடியல, யாரோடயும் சரியா பேச முடியல, தண்ணி, கஞ்சா இப்படி தப்பான வழில போயிட்டேன். ஒரு தடவ கஞ்சா வெச்சு போலீஸ்ல மாட்டிகிட்டேன், வாழ்க்கைய கெடுத்து உடம்ப கெடுத்து இங்க இப்படி சரிப்படுத்த முடியாத வியாதி வாங்கி இருக்கேன், இப்போ நான் இருக்க போறா டேஸ் எண்ணிகிட்டு இருக்கேன்" என்று விலகினான் சிவா .

"ரொம்ப சாரி சார் உங்களுக்கு பழச நினைக்க வெச்சுட்டேன் " என்று ராம் புலம்பும் போதே "ராம் உங்கள பார்க்க உங்க சிஸ்டர் ரோஷினி வந்து இருகாங்க" என்ற குரல் கேட்டது.

"எப்படிடா ராம் இருக்க என்று வந்த ரோஷினியை இது தான் என்னோட சிஸ்டர் ரோஷினி என்று சிவாவிற்கு அறிமுகபடுத்தினான், ராம்.

"ஹலோ", என்றதும் திகைத்தான் சிவா

ஆம், ரோஷினி அவனோட காலேஜ் கிளாஸ்மேட் "ஹே சிவா எப்படி இருக்க செகண்ட் இயர் அப்புறம் உன்ன பாக்க முடியல" என்று நலம் விசாரித்தாள் ரோஷினி.

"ஷாலினி எப்படி இருக்கா? ரோஷினி எங்க இருக்கா?" என்றான் சிவா.

"டேய், நீ இன்னும் அவள நெனச்சுகிட்டு இருக்கியா? அவளும் சென்னைல தான் இருக்கா, ரெண்டு வருஷம் முன்னாடி சந்தோஷ் கூட மேரேஜ் ஆச்சு, போன வருஷம் ஒரு ஆக்சிடென்ட்ல அவரோட பார்வை போயிடுச்சு" என்று விவரித்தாள் ரோஷினி .

"அட கடவுளே யார நான் வாழ்க்கை முழுசா பார்த்து ரசிகனும் இருந்தேன் அவள பாக்க அவனுக்கு கொடுத்து வைக்கல ஆனா நான் கொவ்டிங் மை டேஸ்" என்றான் சிவா விரக்தியுடன்.

க‌ட‌வுளிட‌ம் யாசித்தேன்;

"உன்னை என‌க்கு த‌ந்த பின்

என்ன‌ வேண்டும்?", என்றார்

உன்னை காண

இரு க‌ண்க‌ள் போதாது,

இன்னும் க‌ண்க‌ள் வேண்டும்

என்றே யாசித்தேன்.

என்று ஷாலினியை ப‌ற்றி அவ‌ன் எழுதிய‌ க‌விதையே நினைவிற்கு வ‌ந்த‌து சிவாவிற்கு.

வார்ட் பாய் உள்ளே வந்ததும் இருவரிடமும் சொல்லி விட்டு ரோஷினி கிளம்பினாள்.

ஷாலினியை அவளோட வீட்டில் சந்தித்தாள் ரோஷினி.

"ஷாலினி, நேத்து நான் சிவா வை பார்த்தேன்"என்றாள் ரோஷினி உற்சாகமாய்.

அதிர்ச்சியுடன் ரோஷினியை பார்த்தாள் ஷாலினி.

சிவாவை ப‌ற்றி தெரிய‌ ச‌ற்று அவ‌லுட‌ன் தான் பார்த்தாள்.

......தொடரும்.......

Monday, April 13, 2009

கிரிகெட் மொக்கை

" டேய் விஜய் மணி 6.30 எழுந்திரிக்க போறியா இல்லையா ? " என்று கத்தினான் விஜயின் நண்பன் சிவா.

"மச்சி இதோ கிளம்பிடுறேன்" என்று வேக வேகமாக புறப்பட்டான் விஜய்.

"ஏண்டா இப்படி பறக்குற எப்போ போனாலும் விளையாடதான போறோம்".

"இல்லடா 7 மணிக்கு வர சொன்னாங்களே லேட் ஆ போனா எப்படி " என்றான் பொறுப்புடன்.

ரெண்டு பேரும் காரில் கிரௌண்டுக்கு புறப்பட்டனர் .

"என்னடா டைம், போன வாரம் அந்த மேனேஜர் எப்போ வந்தாரு அவரு விளையடுலையா சும்மா சீன் போடாத மச்சி டிராபிக் இல்ல சீக்கிரம் போய்டுவோம் பீல் பண்ணாத " என்றான் விஜய்.

" ஆமாம் மச்சி அவரு பிராக்டிஸ் வரதே இல்ல ஆனா மேட்ச் மட்டும் விளையாடுவாரு போன வாரம் நம்ம கார்த்தி ஒரு நாள் வருலனு மேட்ச்ல உக்கார வெச்சுட்டாரு " என்று புலம்பினான் சிவா.

"எப்படியும் சீனியருக்கு தான் சான்ஸ் தருவாங்கனா நம்ம போறேதே வேஸ்ட் மச்சி இருந்தாலும் இந்த கிரிக்கெட் எனக்கு ஒரு வெறி அதான் போறேன் அத விட்டு தள்ளு போன வாரம் தெலுங்கு பில்லா ரிலீஸ் ஆச்சே பாத்தியா " என்றான் ஆர்வமாய் விஜய் .

"இல்லடா கேள்வி பட்டேன் அவ்ளோ தான் " என்றான் சிவா .

"சரி நீ சொல்லு மச்சி நயன்தாரா பெஸ்டா அனுஷ்கா பெஸ்டா ஏன்னா எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் அதுனால வித்தியாசம் தெரியல டா " என்றான் விஜய் .

"அதெல்லாம் எனக்கு தெரியல நம்ம கம்பெனி மதுமிதா எனக்கு பிடிக்கும் " என்றான் சிவா .

"மச்சி அவள யாருக்கும் தான் பிடிக்காது என்ன ஒரு ஹோம்லி பேஷ் டா அது " என்று வழிந்தான் விஜய் .

"நாதேறி அவல நெனச்சு உருகாத ரோட்ட பாத்து போ டா " என்றான் சிவா .

"மச்சி இன்னைக்கு சொல்லிட போறேன் டா " என்றான் விஜய் ஆவேசமாய்.

"மச்சி என்னடா மது கிட்ட ப்ரபோஸ் பண்ண போறியா வாழ்த்துக்கள் " என்றான் சிவா குதூகலத்துடன்.

"டேய் புண்ணாக்கு நம்ம கேப்டன் கிட்ட சீனியாரிட்டி பாக்காதீங்க டேலன்ட் பாருங்க அப்ப‌டினு தான், அப்புறம் என்னடா கஷ்ட பட்டு விளையாடுறோம், அந்த மேனேஜர் வ‌ந்தா நமக்கு கல்தா ஆனா கேப்டன் வசனம் மட்டும் பின்னி எடுப்பாரு" என்றான் விஜய் .

சிவா பதில் சொல்லும் முன் "மச்சி நான் இன்னைக்கு விளையாடுவேனா னு தெரியாது ஆனா மூணு வருசத்துக்கு அப்புறம் கண்டிப்பா விளையாடுவேன் ஏன்னா நானும் சீனியர் ஆகிடுவேன் ல என்ன வெளிய தள்ள முடியாது டா " என்றான் விஜய் நக்கலாக.

"மச்சி ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா " என்றான் சிவா .

"நீ என்னடா வசனம் சொல்ல போற " என்றான் விஜய் .

"இதுவும் கடந்து போகும்" என்று தத்துவ மழை பொழிந்தான் சிவா .

"நீயும் இனிமேல் நடந்து போ " என்று பதில் அளித்தான் விஜய் .

இப்படி மொக்கை போட்டு கொண்டே காரில் பாட்டின் சத்தம் கூட்டினர் .

"நிமிர்ந்து நில் உயர்ந்து செல் " என்று சரோஜா பாடல் ஒலித்துக் கொண்டே இன்று விளையாடுவோம் என்ற நம்பிக்கையில் விரைந்தனர் .