Saturday, December 5, 2009

PAAAAAAAAAAAAAA

I just reached my room after watching the wonderful creation of Mr. BalkiPAA. After seeing the trailer I eagerly awaited for this movie. To be frank, I eagerly awaited to look at Vidya Balan on screen and to get pleasure from Maestro Ilayaraja’s Music and also for Amitabh’s acting. I am not a Hindi movie fanatic. And also one more thing I am not that good at Hindi but I can understand it decently.

Because of some Telagana problem over here, I was scared that they might cancel the show. But luckily nothing such happened; else I could have missed such a wonderful movie. “Nothing can stop us in getting the best things”.

About the movie:
One of the wonderful Hindi movies I have ever seen. It’s about a rare genetic disease affected guy and his life. This has everything in it Love, affection, sentiment, politics, brilliancy, childishness, best acting and what not.

About the cast:
Perfect cast has been chosen for the movie. Amitabh, Abhishek, VidyaBalan and others. Everyone did their job brilliantly and excellently. Director extracted the best out of everyone.
Amitabh as Auro 12 year old guy affected by genetic disease i.e., he will look like 60 years old guy even in his 12th year.
Vidya Balan as Auro’s Mother
Abhishek as Auro’s PAA.

About the music:
Music director for the movie is Maestro Ilayaraja. As a Tamil movie fanatic I have enjoyed more of his music this is one more addition to the list. Awesome background score by our maestro. Hats off to you Sir.

About the Makeup:
Makeup played a main role in the movie. Yes it is not that easy to show Amitabh(60+) as 12 year kid. Great job done by Make up artists.

About the dialogues:
I was able to understand 90% of the dialogues. Short and crisp dialogues was adding more beauty to the movie. Most of the dialogues were hilarious. I am sure everyone of you will enjoy the dialogues.

Overall it is a natural movie scripted brilliantly. I don’t know whether I should congratulate Mr.Balki for such a wonderful creation or I should thank him for providing opportunity to watch such a nice movie. Anyway Hats off to you Mr.Balki.

Hats off to Amitabh ji for his wonderful performance. My advance Congratulation to him. I am sure he is going to get numerous awards for his performance.

Vidya Balan is awesome in the movie …lol….. Abishek did his job perfectly. Lady who did the role of Vidya’s mother gave a wonderful performance.

Guys please don’t miss the movie. If I want to rate the movie I will rate 5/5.

Friday, November 27, 2009

Debatable thoughts

After a long time I am posting a new entry in this blog. As you all know writing an English blog is not an easy endeavor for me. Please tolerate with my language if you find any flaw.
I won’t say that after a lot of study I have written this but I can say that I have posted this after a lot of thinking.

As the title says, it’s purely arguable thoughts. You are most welcome to provide your opinion and argue with the thoughts I have posted here. I am not getting philosophical; it’s all my practical thoughts.

Perfection:
The word “Perfection” which we face in our day to day life is nothing but someone’s perception. There is no physical measurement for perfection. It’s all the perception of the person who is superior to us towards his necessities. If you are satisfying his necessity then you are perfect if not then you are not a perfectionist. Most of the times if you are trying to be a perfectionist you will end up hurting someone. For instance, as a human If you are helping someone to whom your friend is not in favor then you might end up hurting your friend’s emotion. It may be ambiguous to accept but it’s the fact. So perfection is all depends on the situation. That’s why “Perfection is nothing but someone’s perception”.

Attitude:
In this fast forwarding world you will often hear the word “Attitude”. People often complain about others saying “His/her attitude is wrong”. But when you evaluate the argument in the neutral point of view it will be useless at some point in time. Because one may not be correct all the time. Also we don’t have any right to comment on others’ attitude. So it finally comes under the assumption that Attitude is nothing but what you make others feel about you.

If you are a really sensible person, at some point in time of your life you will question yourself that “Why I am different to someone? Is there anything wrong with me?” i.e., you may be good to someone and awful to the other. How is this possible? Whether you are a multiple attitude person? I would beg to differ. You can only behave little unusual to those who says your attitude is wrong. It’s because your frequency doesn’t get along with them. Nothing is wrong with you; you just want to be what you are. So it’s good to keep distance to keep up your reputation else you have to explain them who you are and what you want from them. As I mentioned earlier in this passage in the fast forwarding world no one is ready to lend their ears for your justification. So the better solution will be act sensibly to avoid those people. After all “Attitude is nothing but what you make others to feel about you”.

Next topic I would like to share is the most interesting topic that every human being will face in his/her life. Yes, I would like to discuss about “CRUSH” in the forth coming passage.

Crush:
My definition of crush: “It's called as "CRUSH" because it get crushed inside us without being expressed”. Love is a divine thing but Crush is a “human thing” no one will disagree with me on this. Every human at some point in their life will have crush and it will remain in their heart till they rest in their graveyard. For everyone crush is an interesting one. Once we get a crush, at that moment we will forget our self and try to do some hilarious things to impress our crush. Butterflies will fly inside the stomach; heart beats will increase if she responds with a smile. I personally feel not to be friend with my crush. Though, if scenario made me to be friend with her certainly I can’t avoid. Also I would like to clear that we can’t love all people in our crush list.

Lover, whom we feel he /she suits us in all aspect of life but crush, is who attracts only at certain point in time. I am sure, lover will be our crush at one point in time but we might get convinced that they are our best suited partner. That person can’t be named as our crush, it is the one whom we like at an instance and we can’t express our love or we can’t feel our love but we crazed towards them. This might happen in our day to day life. We might get our crush either in bus journey or in our trip or during our shopping or at office, college or school or where ever we go in our routine life. I would say love and crush are feelings but love is from heart and crush is from brain. You can’t remember your entire crush list well I can say you will remember the one whom you can’t convert into love. I assure you will compare at least one characteristics of your crush to match with your partner. That’s the impact crush will made with in you. Well at certain scenario the situation won’t let you to express your love to the crush and those wish will get crushed inside you. That’s the reason I gave the following definition to the crush “It's called as "CRUSH" because it get crushed inside us without being expressed”.

You can’t agree with all the above points. But the perceptions and assumptions are different from others. Provide your comments or you can put your feedback to argue about my thoughts.

It’s all to share and it’s truly fair.

Friday, April 17, 2009

யாசகம் பலவிதம் - பகுதி 2


ரோஷினி சிவாவை சந்தித்ததை கேட்டு சற்று அதிர்ச்சியும் ஆர்வமும் கொண்டாள் ஷாலினி.

பின்ன இருக்காதா? இரண்டு வருட தூய நட்பு. சிவா தான் நடப்பை கொச்சை படுத்தி விட்டதாக உள்ள குற்ற உணர்வை போக்கவே பேச வேண்டாம் என்றாள். சிவா மீது எந்த ஒரு வருத்தமும் இல்லை.

அதன் பிறகு அவளுக்கு சிவாவை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

ஆம், சந்தோஷத்துடன் திருமணம், பிறகு ஆக்சிடென்ட், சந்தோஷிற்கு கண் பார்வை போனது, இப்படி பல திருப்பங்களுடன் சற்றே சோகத்துடன் நகர்ந்தது.

"ரோஷி, சிவா எப்படி பா இருக்கான் எங்க பார்த்த அவனை ?", என்றாள் ஷாலினி ஆவலுடன்.

சற்றே மௌனம் காத்தாள் ரோஷினி.

"ஹே கேக்குறேன் ல சொல்லுபா ஏன் இப்படி சைலெண்டா இருக்க சொல்லுடி ?" என்று ஆர்வத்தை கூட்டினாள் ஷாலினி.

சிவாவை ஹாஸ்பிடலில் பார்த்ததையும் அதன் காரணத்தையும் ஷாலினி கிட்ட விளக்கி சொன்னாள் ரோஷினி.

"இப்படி நடக்கும்னு நெனச்சு கூட பாக்குலபா , அவன் வேற காலேஜ் போய் படிக்குறான் அப்படி தானே நெனச்சேன் ஆனா இப்படி போய்ட்டான் , கேட்கவே கஷ்டமா இருக்கு பா " என்று ஏங்கினாள் ஷாலினி.

"இதுக்கு தான்டி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நெனச்சேன் நான் ஒரு ஓட்ட வாய் சாரி டி " என்றால் ரோஷினி.

"ஹே ரோஷி நீ என்ன பண்ணின, இதுல என்ன இருக்கு அவன் என்ன சொன்னான் ? அவன் என்ன பத்தி கேட்டானா ?" என்றாள் ஷாலினி.

"ஒருத்தன் உங்கள பத்தி நெனச்சா பறக்க ஆரம்பிச்சுடுவீங்களே !" என்று சற்றே கிண்டல் அடித்தாள் ரோஷினி.

"ஹே அப்படி இல்லபா ஸ்டில் ஹி இஸ் மை ப்ரெண்ட் அதான் கேட்டேன்" என்றாள் ஷாலினி.

"ஹே கூல் டவுன் பேபி", "ஐ ம் கெளன்டிங் மை டேஸ்" என்றான் சிவா இத தான்டி அவன் என்கிட்டே சொன்னான் என்றாள் ரோஷினி.

இதை கேட்டதும் ஷாலினி சற்றே வாடினாள். "எவ்ளோ நாள் இருப்பான்?", என்றாள் ஷாலினி அக்கறையுடன்.

"இன்னும் ஒரு வாரம் இருந்தாலே பெருசு பா கொஞ்சம் நிலைமை மோசம் தான் ", என்றாள் ரோஷினி.

அவ‌ளால் கண்ணுல வர தண்ணி நிறுத்த முடியல ஏன்னா சிவா எல்லாரோடையும் அன்பா தான பழகினான். கொஞ்ச நாள் பழகினாலும் யார்கிட்டயும் கெட்ட பேர் இல்ல.

ஷாலினியும் அழ தொடங்கினாள்.

ரோஷினி பேச்சை தொட‌ர்ந்தாள்.

"நான் உன்கிட்ட சொன்னதுக்கு முக்கிய காரணம் நான் அவன பார்த்துட்டு வெளிய வரும் போது வார்ட் பாய் அவனோட கண் டொனேட் சர்டிபிகேட் கொடுத்தான் சோ ஹி இஸ் ரெடி டு டொனேட் ஹிஸ் ஐஸ் , நீ ஏன் அத சந்தோஷ்க்கு கேட்க கூடாது ?" என்று வினா வைத்தாள் ரோஷினி.

"நான் எப்படி டி இதன வருஷம் பாக்காம இப்ப மட்டும் எப்படி போய் கேக்குறது ? எனக்கு அந்த தைரியம் இல்ல அதுவும் சாகுறதுக்கு முன்னாடியே எப்படி என்னால முடியாதுபா ?" என்று தயங்கினாள் ஷாலினி.

"இங்க பாரு ஷாலு ஒருத்தன் செத்ததுக்கு அப்புறம் தன் கண் உயிரோட இருக்க போகுதுனா சந்தோச படுவாங்கடா நீ கேக்குறதுல தப்பு இல்ல " என்று தேற்றினாள் ரோஷினி.

சுமார் ஒரு முப்பது நிமிஷம் பேசி ஷாலினி சிவாவை பார்க்க சம்மதிக்க வைத்தாள் ரோஷினி.

சிவாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றனர் ஷாலினியும் ரோஷினியும்.

ஷாலினி வந்ததும் சிவா சற்றே பரபரப்பானான். இன்னும் ஒரு வாரத்தில் உயிர் பிரிய போவதை மறந்தான். ஆம் அதை நினைத்து இந்த நிமிசத்தை அவன் வேஸ்ட் பண்ண விரும்புல.

ஷாலினியும் சிவாவும் மனம் விட்ட பேச கால் வராத அவளோட போன் எடுத்துட்டு வெளியே போய்ட்ட ரோஷினி. 15 நிமிஷம் கழிச்சு உள்ள வந்து, "என்ன சிவா என்ன முடிவு சொல்ல போற? டெசிஷன் உன்னோடது" என்றாள் ரோஷினி.

டென்ஷன் ஆ பார்த்தான் சிவா அவனுக்கு ஒன்னும் புரியல.

"நான் சிவா கிட்ட‌ அத பத்தி கேக்கவே இல்ல கேட்குற‌ தைரிய‌ம் இல்ல‌" என்று சொல்லி அழுது கொண்டே வெளியே சென்றாள்", ஷாலினி.

என்ன ஆச்சு ரோஷினி ?" என்று திகைப்புடன் கேட்டான் சிவா.

"சிவா என்னை தப்பா நினைக்காத ஷாலினி வேண்டாம்னு சொன்ன நான் தான் இத கேட்க சொன்னேன் ஆனா இப்போ அவளால முடியல", என்று இழுத்தாள் ரோஷினி .

"ரோஷினி என்னனு தெளிவா சொல்லு என்ன கொளப்பாத யோசிகுற நிலைமைல நான் இல்ல " என்றான் சிவா.

"உன்னோட டெத்க்கு அப்புறம் அப்புறம் "

"அப்புறம் என்ன ரோஷினி ?"

"உன்னோட கண்ண சந்தோஷுக்கு டொனேட் பண்ணனும் " என்று முடித்தாள் ரோஷினி.

சொல்லி முடித்ததும் சிவா மூஞ்சில அப்படி ஒரு சந்தோஷம், பேரானந்தம் , மகிழ்ச்சி . இத்தனை வார்த்தை சொல்லியும் அவனோட ஆனந்ததை வெளிப்படுத்த முடியல.

ஏதோ இத்தன நாள் வாழ்ந்து காணாத சுகம் அடைந்த மகிழ்ச்சி . ஆம் அவன் "இன்னும் முப்பது வருஷம் வாழ போற " இப்படி சொன்ன கூட அவனோட முகத்தில அவ்ளோ சந்தோஷம் பாக்க முடியாது.

சந்தோசத்தில் ரோஷினி கிட்ட ஷாலினிய பத்தி சொல்ல ஆரம்பித்தான்,

உன்னை ம‌ட்டுமே க‌ண்டிருந்தேன்;
க‌ண்டிருக்க‌ ஆசை கொண்டேன்;
முடிய‌வில்லை;

நான் பூமியில் வாழ
கொடுத்து வைக்க‌வில்லை;
நீ என்னுட‌ன் இல்லாத‌ போது
நான் வாழ்ந்து என்ன‌ ப‌ய‌ன்?

உன் க‌ண‌வ‌னுக்கு என் க‌ண்ணை
யாசிக்க‌ வ‌ந்தாய்
கேட்க‌ உன்னால் முடிய‌வில்லை;

யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌வித‌ம்
நீ கேட்ட‌து அதுவ‌ல்ல‌,
என் நெஞ்சில் நிறைந்த‌ நீ
என் க‌ண்ணில் நிறைய‌ போகிறாய்
உன் க‌ண‌வ‌ன் உன்னை காண்ப‌தால்;

யாச‌க‌ங்க‌ள் ப‌ல‌விதத்தில்
நானும் யாசிக்கிறேன் ஆண்ட‌வ‌னிட‌ம்
என் உயிரை சீக்கிர‌ம் ப‌றிக்குமாறு!
இனி ஒரு போதும் பொறுக்க‌ மாட்டேன்
உன்னை காணாம‌ல்;

சொல்லி முடித்ததும் அதிக சந்தோஷத்தை தாங்க முடியாத சிவாவின் இதயம் நின்றது.

சந்தோஷிற்கு கண்கள் பொருத்தப்பட்டது.

ஷாலினி சந்தோஷ் இல்லறம் நல்லறம் ஆனது.

ஷாலினியும் சந்தோஷும் சிவாவின் முதல் பிறந்த நாளை தடபுடலாய் கொண்டாடினர்.

இந்த சிவா வேற யாரும் இல்ல ஷாலினி சந்தோஷின் மகன்.

இனி இவனுக்கு தோல்வி இல்லை.

பலவித பலரது யாசகத்தில் வந்தவன்.

------------------- முற்றும் --------------------------------

கண் தானம் செய்வோம்; உலகின் அழகை என்றென்றும் ரசிப்போம்;
நன்றி :)

Thursday, April 16, 2009

யாச‌க‌ம் ப‌ல‌வித‌ம் - ப‌குதி 1

"தயவு செஞ்சு என்னை டிஷ்டர்ப் பண்ணாத சிவா ப்ளீஸ்",

"என்னை மறக்க ட்ரை பண்ணு , இனிமேல் என் மூஞ்சில முழிக்காத"

இது தாங்க என் ஷாலு என்னை பார்த்து சொன்ன கடைசி வரிகள் என்று ராமிடம் விளக்கி கொண்டிருந்தான் சிவா.

"ஏன் சார் அதுக்கு அப்புறம் நீங்க உங்க ஷாலினிய பாக்கவே இல்லையா" என்றான் ராம்.

"இல்லைங்க அதுக்குள்ள என்னோட ஷாலு வேற ஒருத்தரோட திருமதி ஆனா நியூஸ் தான் எனக்கு வந்தது, ஏதோ ஒன்னு தொலைஞ்சு போன மாதிரி ஆயிடுச்சு அதான் இப்படி ஆயிட்டேன்" என்றான் சிவா.

"எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிடீங்க " என்று கலாய்த்து கொண்டே ,"சார் உங்க லவ் ஸ்டோரி கொஞ்சம் சொல்லுங்க" என்றான் ராம்.

"ரொம்ப சரி இப்படி ஆகிட்டேன் பாருங்க அடுத்தவன் லவ் ஸ்டோரி நாவே கிளுகிளுப்பு தான, சொல்றேன் சார்"

"அது ஓர் அழகிய பூ உதிர் காலம், வேகமா நடந்தா பூமிக்கு வலிக்குமோ, என்று மெல்ல பாதத்தை எடுத்து வைத்து வந்து கொண்டிருந்த போது என் தேவதை தரிசனம் கிடைத்தது".

"இப்படி உருகுவதற்கு நான் ரியல் ஹீரோ இல்ல சார் ரீல் தான்" என்றான் சிவா நிதானமாய்.

"உங்களுக்கு கொடுத்த பில்டப் போதும் உங்க கதை சொல்லுங்க பாஸ் " என்றான் ராம்.

"என்ன சார், உருகி உருகி லவ் பண்ணி இருக்கேன், கொஞ்சம் பில்டப் கொடுக்க கூடாதா? , சரி சொல்றேன் கேளுங்க"

"நான் என் தேவதைய என்னோட காலேஜ்ல தான் பார்த்தேன், பார்த்தவுடன முடிவு பண்ணிட்டேன். இவ தான் டா உனக்கு சரியான பொண்ணு விடாதடா சிவா, எனக்குள்ள மைன்ட் வாய்ஸ் வேற ஓடிட்டு இருந்துச்சு "

"நம்ம என்ன மன்மதனா?, ஸ்ரைட்டா லவ் சொல்ல, அது முடியாம முதல்ல ப்ர‌ண்ட் ஆனேன்"

"அப்படியே பழகி நல்ல திக் பிரெண்ட்ஸ் ஆனோம் என்னோட ஒவ்வொரு நிமிஷமும் அதில் நடந்த விஷயத்த தினமும் போன்ல பேசிப்போம். எங்க அப்பாகிட்ட காலேஜ்கே தெரியாத பீஸ் எல்லாம் வாங்கி போன் பில், கிப்ட் எல்லாம் கொடுத்தேன் அவளும் என் மேல நல்ல நட்ப்போட இருந்தாங்க, இப்படியே இரண்டு வருஷம் முடிய வந்தது" என்று தொடர்ந்து கொண்டிருந்தான் சிவா.

"சார் அப்போ இரண்டு வருஷம் பசங்க கூட பேசாம கடல மட்டும் போட்டு இருக்கீங்க, கடைசியா லவ் சொன்னீங்களா இல்லையா ?" என்று ஆர்வமாய் வினவினான் ராம்.

"சார் சும்மா சொல்லுல லவ் ரொம்பவே பவர்புல் அந்த ரெண்டு வருஷம் நட்புனு சொல்லிட்டு காதல் மறச்சு வெச்சு நொந்து போனேன். ஒரு சமயத்துல பைத்தியம் பிடிப்பது போல் ஆனது. சரி, காதல் சொல்லிடலாம் நெனச்சு அவகிட்ட சொன்னா அவ என்னை ஒரு உண்மையான நண்பனா தான் நெனச்சு இருந்தா , என்னோட காதல சொல்லி என்னோட நட்பை கொச்சை படுத்தி விட்டேன்" என்று புலம்பினான் சிவா .

"சார் நீங்க உங்க லவ் சொன்னதுக்கு அவுங்க என்ன சொன்னாங்க" என்று ஆர்வமானான் ராம் .

"நான் முன்னாடி சொன்னது தான் சார் "

"தயவு செஞ்சு என்னை டிஷ்டர்ப் பண்ணாத சிவா ப்ளீஸ், என்னை மறக்க ட்ரை பண்ணு , இனிமேல் என் மூஞ்சில முழிக்காத" இது தாங்க என்று ராமிடம் விளக்கி கொண்டிருந்தான் சிவா.

"இப்படி அவ சொன்னதுக்கு நான் தான் காரணம்,"

"என்னால அவள நட்பாய் பாக்க முடியல, நான் திருந்திற மாறி இல்ல, அதான் இப்படி பதில் சொன்னா, அதுக்கு அப்புறம் என்னால படிக்க முடியல, யாரோடயும் சரியா பேச முடியல, தண்ணி, கஞ்சா இப்படி தப்பான வழில போயிட்டேன். ஒரு தடவ கஞ்சா வெச்சு போலீஸ்ல மாட்டிகிட்டேன், வாழ்க்கைய கெடுத்து உடம்ப கெடுத்து இங்க இப்படி சரிப்படுத்த முடியாத வியாதி வாங்கி இருக்கேன், இப்போ நான் இருக்க போறா டேஸ் எண்ணிகிட்டு இருக்கேன்" என்று விலகினான் சிவா .

"ரொம்ப சாரி சார் உங்களுக்கு பழச நினைக்க வெச்சுட்டேன் " என்று ராம் புலம்பும் போதே "ராம் உங்கள பார்க்க உங்க சிஸ்டர் ரோஷினி வந்து இருகாங்க" என்ற குரல் கேட்டது.

"எப்படிடா ராம் இருக்க என்று வந்த ரோஷினியை இது தான் என்னோட சிஸ்டர் ரோஷினி என்று சிவாவிற்கு அறிமுகபடுத்தினான், ராம்.

"ஹலோ", என்றதும் திகைத்தான் சிவா

ஆம், ரோஷினி அவனோட காலேஜ் கிளாஸ்மேட் "ஹே சிவா எப்படி இருக்க செகண்ட் இயர் அப்புறம் உன்ன பாக்க முடியல" என்று நலம் விசாரித்தாள் ரோஷினி.

"ஷாலினி எப்படி இருக்கா? ரோஷினி எங்க இருக்கா?" என்றான் சிவா.

"டேய், நீ இன்னும் அவள நெனச்சுகிட்டு இருக்கியா? அவளும் சென்னைல தான் இருக்கா, ரெண்டு வருஷம் முன்னாடி சந்தோஷ் கூட மேரேஜ் ஆச்சு, போன வருஷம் ஒரு ஆக்சிடென்ட்ல அவரோட பார்வை போயிடுச்சு" என்று விவரித்தாள் ரோஷினி .

"அட கடவுளே யார நான் வாழ்க்கை முழுசா பார்த்து ரசிகனும் இருந்தேன் அவள பாக்க அவனுக்கு கொடுத்து வைக்கல ஆனா நான் கொவ்டிங் மை டேஸ்" என்றான் சிவா விரக்தியுடன்.

க‌ட‌வுளிட‌ம் யாசித்தேன்;

"உன்னை என‌க்கு த‌ந்த பின்

என்ன‌ வேண்டும்?", என்றார்

உன்னை காண

இரு க‌ண்க‌ள் போதாது,

இன்னும் க‌ண்க‌ள் வேண்டும்

என்றே யாசித்தேன்.

என்று ஷாலினியை ப‌ற்றி அவ‌ன் எழுதிய‌ க‌விதையே நினைவிற்கு வ‌ந்த‌து சிவாவிற்கு.

வார்ட் பாய் உள்ளே வந்ததும் இருவரிடமும் சொல்லி விட்டு ரோஷினி கிளம்பினாள்.

ஷாலினியை அவளோட வீட்டில் சந்தித்தாள் ரோஷினி.

"ஷாலினி, நேத்து நான் சிவா வை பார்த்தேன்"என்றாள் ரோஷினி உற்சாகமாய்.

அதிர்ச்சியுடன் ரோஷினியை பார்த்தாள் ஷாலினி.

சிவாவை ப‌ற்றி தெரிய‌ ச‌ற்று அவ‌லுட‌ன் தான் பார்த்தாள்.

......தொடரும்.......

Monday, April 13, 2009

கிரிகெட் மொக்கை

" டேய் விஜய் மணி 6.30 எழுந்திரிக்க போறியா இல்லையா ? " என்று கத்தினான் விஜயின் நண்பன் சிவா.

"மச்சி இதோ கிளம்பிடுறேன்" என்று வேக வேகமாக புறப்பட்டான் விஜய்.

"ஏண்டா இப்படி பறக்குற எப்போ போனாலும் விளையாடதான போறோம்".

"இல்லடா 7 மணிக்கு வர சொன்னாங்களே லேட் ஆ போனா எப்படி " என்றான் பொறுப்புடன்.

ரெண்டு பேரும் காரில் கிரௌண்டுக்கு புறப்பட்டனர் .

"என்னடா டைம், போன வாரம் அந்த மேனேஜர் எப்போ வந்தாரு அவரு விளையடுலையா சும்மா சீன் போடாத மச்சி டிராபிக் இல்ல சீக்கிரம் போய்டுவோம் பீல் பண்ணாத " என்றான் விஜய்.

" ஆமாம் மச்சி அவரு பிராக்டிஸ் வரதே இல்ல ஆனா மேட்ச் மட்டும் விளையாடுவாரு போன வாரம் நம்ம கார்த்தி ஒரு நாள் வருலனு மேட்ச்ல உக்கார வெச்சுட்டாரு " என்று புலம்பினான் சிவா.

"எப்படியும் சீனியருக்கு தான் சான்ஸ் தருவாங்கனா நம்ம போறேதே வேஸ்ட் மச்சி இருந்தாலும் இந்த கிரிக்கெட் எனக்கு ஒரு வெறி அதான் போறேன் அத விட்டு தள்ளு போன வாரம் தெலுங்கு பில்லா ரிலீஸ் ஆச்சே பாத்தியா " என்றான் ஆர்வமாய் விஜய் .

"இல்லடா கேள்வி பட்டேன் அவ்ளோ தான் " என்றான் சிவா .

"சரி நீ சொல்லு மச்சி நயன்தாரா பெஸ்டா அனுஷ்கா பெஸ்டா ஏன்னா எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் அதுனால வித்தியாசம் தெரியல டா " என்றான் விஜய் .

"அதெல்லாம் எனக்கு தெரியல நம்ம கம்பெனி மதுமிதா எனக்கு பிடிக்கும் " என்றான் சிவா .

"மச்சி அவள யாருக்கும் தான் பிடிக்காது என்ன ஒரு ஹோம்லி பேஷ் டா அது " என்று வழிந்தான் விஜய் .

"நாதேறி அவல நெனச்சு உருகாத ரோட்ட பாத்து போ டா " என்றான் சிவா .

"மச்சி இன்னைக்கு சொல்லிட போறேன் டா " என்றான் விஜய் ஆவேசமாய்.

"மச்சி என்னடா மது கிட்ட ப்ரபோஸ் பண்ண போறியா வாழ்த்துக்கள் " என்றான் சிவா குதூகலத்துடன்.

"டேய் புண்ணாக்கு நம்ம கேப்டன் கிட்ட சீனியாரிட்டி பாக்காதீங்க டேலன்ட் பாருங்க அப்ப‌டினு தான், அப்புறம் என்னடா கஷ்ட பட்டு விளையாடுறோம், அந்த மேனேஜர் வ‌ந்தா நமக்கு கல்தா ஆனா கேப்டன் வசனம் மட்டும் பின்னி எடுப்பாரு" என்றான் விஜய் .

சிவா பதில் சொல்லும் முன் "மச்சி நான் இன்னைக்கு விளையாடுவேனா னு தெரியாது ஆனா மூணு வருசத்துக்கு அப்புறம் கண்டிப்பா விளையாடுவேன் ஏன்னா நானும் சீனியர் ஆகிடுவேன் ல என்ன வெளிய தள்ள முடியாது டா " என்றான் விஜய் நக்கலாக.

"மச்சி ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா " என்றான் சிவா .

"நீ என்னடா வசனம் சொல்ல போற " என்றான் விஜய் .

"இதுவும் கடந்து போகும்" என்று தத்துவ மழை பொழிந்தான் சிவா .

"நீயும் இனிமேல் நடந்து போ " என்று பதில் அளித்தான் விஜய் .

இப்படி மொக்கை போட்டு கொண்டே காரில் பாட்டின் சத்தம் கூட்டினர் .

"நிமிர்ந்து நில் உயர்ந்து செல் " என்று சரோஜா பாடல் ஒலித்துக் கொண்டே இன்று விளையாடுவோம் என்ற நம்பிக்கையில் விரைந்தனர் .

Tuesday, March 31, 2009

எனது எண்ணங்கள்

நானும் பல தலைப்பை பற்றி விவாதித்து எழுத ஆசை ஆனால் அதற்கு ஏற்ற அறிவு நம்ம கிட்ட இல்லைங்க. இந்த போஸ்ட் முழுக்க நடைமுறை தமிழில்தான் இருக்கும். இது என்னோட வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சி னு சொல்றத விட விவாதம் என்றே சொல்லலாம்.

நான் விவாதித்த இரண்டு விஷயங்களை இங்க சொல்ல உள்ளேன்.

ஒன்று, சாப்ட்வேர் வேலை செய்யற மக்களை பத்தி,

இன்னொரு விஷயம் தமிழ் பாதுகாக்க பட்ட விதத்தை, நான் மத்தவங்க கிட்ட சொன்ன கருத்தை சொல்ல போறேன்.

அன்னைக்கு அரக்கோணம் லிருந்து ஈரோடு வரைக்கும் ரயில் பயணம். ஒரு 5 மணி நேர பயணம் என்னடா பண்றதுன்னு உக்காந்து இருந்தேன். எனக்கு பக்கத்துல ஒரு 60 வயசு பெரியவரு அவரோட கல்யாணம் ஆனா பொண்ணோட உக்காந்து இருந்தாரு. பக்கத்துல வயசான தம்பதி இருந்தாங்க.

முதல்ல பெரியவுங்க ரெண்டு பெரும் வழக்கம் போல கவர்மென்ட் பத்தி பேசிட்டு வந்தாங்க. அப்புறம் அப்படியே சாப்ட்வேர் பத்தி பேசு மாறிச்சு. ரெண்டு பெரும் சென்னை மக்கள்.

பெரியவர் 1: "இந்த சாப்ட்வேர் மக்கள் தொல்ல தாங்க முடியல. அவுங்க ஏதோ காசு வாங்குராங்கனு சென்னைல இருக்கிற வீட்டு வாடகையெல்லாம் ஏத்தி விட்டுடாங்க. அவுங்கனால தான் நம்ம ஊர்ல பாதி பிரச்சனை ", சொல்லி முடிச்சாரு.

பெரியவர் 2 : "ஆமாங்க அதே தான்" என்று ஆமாம் சாமி போட்டார்.

நான் : "சார், மன்னிச்சுக்கோங்க!, நீங்க பேசும் போது குறுக்க பேசுறதுக்கு. நானும் ஒத்துக்குறேன் சாப்ட்வேர் மக்கள் வாடகை ஏத்துனாங்க அதுக்கு காரணமே நீங்க எல்லாரும் தான்!" என்று மெதுவா சொன்னேன்.

பெரியவர் 2: "எப்படி தம்பி சொல்ற சும்மா சொல்லாத", என்றார் .

நான் : "சார், நான் ஏன் சொன்னேன் தெரியுமா? நாங்க எல்லாம் வேலைக்கு சிட்டிக்கு வந்த உடன ப்ரெண்ட்ஸ் ஓட தான் தங்கணும். பிரம்மச்சாரிய தான் இருப்போம். போய் வீடு கேட்டா யார் உடனே தருவா? உங்களுக்கெல்லாம் வீடு தர முடியாது. இது தான் பதில் வரும். அப்புறம் நாங்க வாடகை எவ்வளவு நாளும் சரி சொன்ன ஒத்துக்குவாங்க. இப்படி எல்லாரும் ஏத்துனாங்க. எங்களுக்கும் மட்டும் என்ன சம்பளத்தை எல்லாம் வாடகையா கொடுக்க அசையா " என்றேன்.

ரெண்டு பெரும் ஒரு நேரத்துல நீ சொல்றது சரி தம்பி என்றனர்.

இப்படி அவுங்க கூட நல்ல பேசவே அடுத்த விவாததுக்கு என்னையும் இழுத்தாங்க.

பெரியவர் 1 : "தம்பி இந்த தமிழ்நாட்டு பசங்க தான் வெளிய போய் கஷ்படுறாங்க ஹிந்தி தெரியாம கரெட்டா ", என்றார்.

நான் : "ஆமாம் சார் " என்றேன்.

பெரியவர் 2 : "எப்போ ஹிந்தி ரெண்டாவுது மொழியா எடுத்து படிக்கரமோ அப்போ தான் தமிழ்நாட்டு பசங்க உருபடுவாங்க" என்று ஏங்கினார்.

நான் : "சார் அப்படி இல்ல ஹிந்தி ரெண்டாவது மொழி எடுத்து படிச்சா தமிழ் தான் அழிஞ்சு போகும் டியுசன் போய் படிக்கலாம் சார் " என்றேன்.

பெரியவர் 1 : "நீ எப்படி தம்பி சொல்ற அதெல்லாம் ஒன்னும் இல்ல " என்றார் .

நான் : "சார் உங்க தாய் மொழி என்ன ?" என்றேன்.

பெரியவர் 1 : "சௌராஷ்ட்ரா " என்றார்.

நான் : "இப்போ பார்தீங்கனா வட நாட்ல என்ன மொழின்னு சொன்ன நமக்கு ஹிந்தி மட்டும் தான் நியாபகத்துக்கு வரும். ஆனா இந்தியா ல இருக்கிற 18 மொழில ஹிந்தி மட்டும் தான் தெருஞ்சு இருக்கு . உங்க மொழிய உங்க வீட்டுல பேசுறீங்க ஆனா ஒரு 4 தலைமுறை கழிச்சு அத பேசுறது கொஞ்சம் கஷ்டம் எல்லாரும் இரண்டாவுது மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. இந்தியாவுக்கு தேசிய மொழி அப்படி ஒன்னும் இல்ல, ஆங்கிலம் மாதிரி தான் ஹிந்தி யும். ஏதோ ஒண்ணுமே தெரியாத கம்ப்யுட்டர் ல இருக்கிற மொழி படிக்குறோம் தேவை படும் போது ஹிந்தியும் படிச்சுகுறோம் சார் . இப்போ கத்துகாம எப்போ கத்துக்க போறோம். சும்மா இப்போ ஜாலியா இருக்க தமிழ் மறந்துட்டு. தமிழ் அழிக்குறது நியாயம் இல்லை" என்றேன் .

பெரியவர் 1: நான் சொல்வது சரி என்பது போல் தலை அசைத்தார்.

பெரியவர் 2: கண்டிப்பா தமிழை அழிய விடமாட்டேன் என்பது போல் பார்த்தார் .

எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் தமிழை வளர்த்துவிட்ட பெருமிதம் என்னுள் .

அது மட்டும் இல்ல சாப்ட்வேர் மக்கள் மேல் இருந்த களங்கம் துடைத்த மகிழ்ச்சி.

Friday, March 13, 2009

பயணத்தின் பயன்

ஜெய், ரொம்ப ஜாலியான பையன். அவனுக்கு, எது சரின்னு படுதோ அத செய்ய ஆசைப்படுற டைப். அடிக்கடி ரயில்ல பயணம் பண்ணுவான். அந்த அசதி தெரியாம இருக்க சரக்கு அடிச்சுபான்.

அப்ப‌டி தான் ஒரு நாள் அவனோட ஊர்ல இருந்து அவன் வேலை பாக்குற ஊருக்கு புறப்பட்டான். காலைல டிராவல், அதுனால சரக்கு அடிகுல. ஆனா பெப்சி பாட்டில்ல மிக்ஸ் பண்ணி வெச்சுகிட்டான்.

ஸ்டேஷன் வந்தவுடனே ரிசர்வேஷன் சார்ட்ல எதாவுது தேறுமான்னு பார்த்துகிட்டு இருகாரு. அதாங்க F20 ல இருந்து F26 வரைக்கும், பயபுள்ள சைட் அடிக்க தான். அவனுக்கு ராசி சரி இல்லை சார், அப்படி ஒண்ணுமே இல்ல.

அவனோட ராசி அவனோட கம்பர்ட்மென்ட்ல ஒரு கை குழந்தையோட ஒரு தம்பதி இருந்தாங்க. ஆனா குழந்தையோட அழகு ஜெய் நல்ல கவர்ந்துடுச்சு.

அந்த குழந்தை பண்ற சேட்டையெல்லாம் பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தான். அப்போ கணவன் மனைவி ரெண்டு பேரும் ஜன்னல் ஓர சீட்ல இருந்தாங்க. ஜெய் வெளில உள்ள அழக ரசிக்க கொஞ்சம் நேரம் கதவு பக்கம் போயிட்டு அங்க நின்னு ஒரு பத்து நிமிஷம் ரசிச்சுகிட்டு இருந்தான்.

அவனோட சீட்டுக்கு போகும் போது அங்க பக்கத்துல ஒருத்தர் தம் அடிச்சுட்டு இருந்தாரு, "யாருங்க ரூல்ஸ் கேக்குறா". அந்த நாத்தம் அவன் மேலையும் இருந்துச்சு. அதுனால அந்த தம்பதி நம்ம ஜெய்ய‌ ரொம்ப கேவலமா பார்த்தாங்க. ஜெய் கொஞ்ச யோசிச்சான், அப்புறம் அத பெருசா எடுதுகுல. அவனுக்கு எதுவும் புரியல.


அப்போ அந்த கை குழந்தை அழுதது அந்த அம்மாவுக்கு வேற வழி இல்ல . ஆம் ஒரு குட்டி கவிதை நியாபகம் வந்தது. "அழும் குழந்தைக்கு தெரியாது தன் தாய் படு சங்கடம், தான் அழும் போது". ஆம் தன் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க சங்கடத்துடன் திரும்பினாள்.


அப்போது ஜெய் ஒன்னும் தெரியாதவன் போல் அவன் வைத்து இருந்த புக் எடுத்துக் கொண்டு கதவின் பக்கம் சென்றான். ஒரு 20 நிமிஷன் கழிச்சு அவன் இருக்கைக்கு வந்தான்.நல்ல வேலை இப்போ யாரும் தம் அடிகுல.


அந்த தம்பதி இவனை ஒரு நன்றியுடன் பார்த்தனர். ஆனால் அதை ஜெய் கண்டுகொள்ளவில்லை. அவனது புக்கை புரட்டி கொண்டிருந்தான். அவனது பயணம் சுமார் பத்து மணி நேரம் தொடர்ந்தது. குழந்தை சுமார் இரண்டு மூன்று முறை இடம் தெரியாது அழுதது. ஜெய் சிறிதும் சங்கடப்படாமல் குழந்தை அழுகும் போது கதவின் பக்கம் சென்று விட்டான்.


அந்த தம்பதி ஜெய் இறங்கும் ஸ்டேஷனுக்கு முந்தைய ஸ்டேஷன்ல இறங்கினர். வண்டி நின்றதும் அவர்கள் இறங்கும் முன் அக்குழந்தையின் தாயும் தந்தையும் ஜெய்யின் முகம் பார்த்து நன்றி சொன்னார்கள். அவனுக்கு என்ன சொல்றது தெரியாம கொஞ்சம் நேர யோசனைக்கு சென்றான். வண்டி புறப்பட்டது சன்னல் வழியாக அக்குழந்தைக்கு கை அசைத்தான்.

அவன் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி வேறொரு வண்டி பிடிக்கணும் அதில் அடிப்பதற்கு பெப்சி பாட்டில்ல வைத்திருந்த சரக்கை சன்னல் வழியாக வீசி எறிந்தான் சற்று தெளிவு பெற்ற மனநிலையுடன் இறங்கி அடுத்த வண்டி ஏறினான்.


இவனை அறியாமலே இவன் அறிவு பெற்றான். ப‌ய‌ண‌த்தில் ப‌ய‌ன் அடைந்தான்.

Sunday, March 1, 2009

என்னவென்று சொல்வது?

அன்பு , இளமாறன் , அருள் , ஸ்ரீகாந்த் நாலு பேரும் தோஸ்த். ஒன்னா வேலை செய்றாங்க. இவுங்க நாலு பேரையும் என்னனு சொல்லுவாங்க தெரியுமா?

இத கொஞ்சம் லேட்டா பார்ப்போம்.

"அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை",

இந்த பாட்டு பாடியது அன்புவின் மொபைல் ஆமா அவரோட ரிங்க்டோன்.

"சொல்லுடா, அருள் நீ ரெடியா?" என்றான் பரபரப்புடன்.

"அன்பு, நான் இடத்துக்கு முன்னாடி தான் நிக்குறேன் ஸ்ரீகாந்தும் இளமாறனும் இன்னும் இரண்டு நிமிஷத்துல வந்துடுவாங்க நீயும் சீக்கிரம் வ‌ந்தா கரெக்டா இருக்கும்", அருள் அன்புவிடம் அவுங்க ப்ளான் பத்தி சொல்லிட்டு இருந்தான்.

"மச்சி நான் பக்கத்துல வந்துட்டேன் இப்போ வண்டில இருந்து இற‌ங்குறேன்", என்று சொல்லிக் கொண்டே நடந்து வந்து அருள் முதுகை தட்டி,

"என்ன மச்சி எல்லாம் ரெடியா ?" என்று பரபரப்புடன் ராயல் பாரின் வாச‌ல் முன்பு நின்றனர்.

ஆமாங்க, இவுங்கா நாலு பெரும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பாக்குறாங்க.

நாலு பேரையும் "வெட்டி பசங்கன்னு" அவுங்களே சொல்லிக்குவாங்க.

இன்னைக்கு சனிக்கிழமை அதான் பயலுங்க சரக்கு அடிக்க பிளான் போட்டு நடத்துறாங்க.

இளமாறனும் , ஸ்ரீகாந்தும் வந்ததும், "மச்சி, சரக்கு அடிக்க இவ்ளோ பில்ட் அப் தேவையா ?" என்றதும்.

"எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் தெருஞ்சுக்கோ" என்றான் அருள்.

"டேய் அடிக்குறதுக்கு முன்னாடி தத்துவமா வாங்கடா போலாம்" என்று எல்லாரையும் வழிநடத்தினான் அன்பு.

ஒரு டேபிள் பிடிச்சு நாலு பேரும் உக்காந்து ஆர்டர் ஸ்டார்ட் பண்ணிடாங்க.

"4 லார்ஜ் ராயல் சாலெஞ் வித் சோடா அப்புறம் 2 ப்ளேட் சிக்கன் மஞ்சுரியன் கொஞ்சம் சீக்கிர‌ம் கொண்டுவாங்க " என்று முடித்தான் அன்பு.

சரக்கு வந்தது சோடா கலந்து சியர்ஸ் சொல்லி அடிக்க ஸ்டார்ட் பண்ணியாச்சு.
....
கிரிகெட் பத்தி பேச்சு நடந்தது . மச்சி இந்த தோனிக்கு செம லக் என்று ஸ்டார்ட் பண்ணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் செம டீம் இப்போ என்று சென்றது விவாதம்.
முதல் ரவுண்ட் முடிஞ்சது.
..........
இப்போ அருள் "ஆர்டர் ரிபிட் பண்ணுங்க டிரிங்க்ஸ் மட்டும் சிக்கன் வேண்டாம்" என்றான்.
..........
இப்போ ஆஸ்கர் பத்தி நடந்தது. மச்சி ரெஹ்மான் வாய்ப்பே இல்லடா சூப்பர் , ஆனா அவருக்கு இந்த அவார்ட் லேட்டு , அவராவுது சரி, நம்ம ராஜா சார் பாவம் என்று சென்றது .
..........

இரண்டாவது ரவுண்ட் முடிஞ்சது.
..........
"ஆர்டர் ரிபிட் பண்ணுங்க வித் 1 ப்ளேட் சிக்கன்" என்றான் இளமாறன்.
..........
"மச்சி , அந்த சுவாதி கிட்ட பேசுனியா? என்ன தான் சொல்றா உன்ன இப்படி சுத்த விடுறா ? என்ன நினைச்சுகிட்டு இருக்கா ? ரெண்டுல ஒன்னு கேட்டுடு , அன்பு" என்று மப்பில் பாச மழை பொழிந்தான் அருள் .

"ஆமாம்டா எதுக்கு டைம் வெஸ்ட் பண்ற பூவா தலையா போட்டு பார்த்துடுவோம் என்ன சொல்ற" ,
"யாருடா இது? என்று மப்பில் அன்பு தலை நிமிர்த்தி பார்த்தான்" வேற யாரு நம்ம இளமாறன் தான்.

"என்னடா ஸ்ரீகாந்த் நீ எதுவும் சொல்லுல " என்றதும் .

"ஆர்டர் ரிபிட் பண்ணுங்க டிரிங்க்ஸ் மட்டும் சிக்கன் வேண்டாம்" என்றான் அங்க சிரிப்பு வெடி தான் போங்க.

சரக்கு வந்து "இது தான் மச்சி லாஸ்ட் ரவுண்ட் ப்ராமிஸ் பண்ணிட்டு " அடிச்சாங்க .

"டேய் டேய் அன்பு மெதுவா குடிடா ஏன் அவசரம் "

"இத எப்படி ரசிச்சா குடிக்க முடியும் போடா"

"பில் கொடுவாங்கா ப்ளீஸ்", என்று கச்சேரி முடிய போறத சொன்னான் இளமாறன்.

"மச்சி நேத்து வரேன்னு சொல்லிட்டு அவ என்ன ஏமாத்திட்டா, அவல சும்மா விட கூடாது" என்று புலம்ப ஆரம்பிச்சான் அன்பு .

"அள்ளுங்க‌டா அவன", சொல்லிட்டு அப்படியே ரூமுக்கு தள்ளிட்டு வந்தாச்சு.

"மச்சி இப்பவாவுது பேசட்டுமா "

"அன்பு பேசு ஆனா அளவா பேசு ரொம்ப பேசி எங்க மப்ப இறக்காத" என்றான் அருள்.

"மச்சி போன மீட்டிங்ல பார்த்து பேசிட்டு மெசஞ்சர்ல சேர்த்தேன்"

"அப்புறம் அப்போ அப்போ காபி ஷாப் போவோம் , கிப்ட் கொடுத்தேன்"

"நாதேறி எனக்கு எதாவுது வாங்கி கொடுத்து இருக்கியா " என்றான் ஸ்ரீகாந்த்.


"மச்சி என்னடா இப்படி சொல்லிட்ட உன்ன பிரிச்சு பாக்க விரும்புல "

"டேய் ஸ்ரீகாந்த் கொஞ்சம் சைலெண்டா இரு நீ சொல்லுடா அன்பு " என்றான் இளமாறன்.


"அப்புறம் டா ஒரு நாள் நைட்டு சாப்பிட கூபிட்டா நான் அப்போ தான் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு இருந்தேன் இவ கூப்பிடதுக்கு நான் போயி சாப்பிட்டேன் டா "

"இப்படியே சாபிடு 34 பேன்ட் 36 ஆயிடும் டா பாத்துக்கோ"


"நீ மேல சொல்லு அன்பு ", என்றான் அருள் .

"அவளுக்கு பல தடவ கோடிங் பண்ணி கொடுத்திருக்கேன் டா"


"சரி அதுக்கு இப்போ என்ன "


"இல்ல டா இப்படி அவளுக்கு தேவையானத பார்த்து பார்த்து செய்து இருக்கேன் டா "


"சரி அதுக்கு "


"போன வாரம் டா டிஸ்கொதே போலாம் வரியா கேட்டேன் டா அவளும் சரினு சொன்னா டா "


"அடபாவி அதான் போன வாரம் எங்க கூட வர மாட்டேன் சொன்னியா "


"இருடா புல்லா சொல்றேன் , சரி டிஸ்கோதே முன்னாடி வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் அவ அவளோட பாய் ப்ரெண்டோட வந்து இறங்கி ஷாக் கொடுத்தா மச்சி "


"ஷாலினி இப்படி பண்ணுவானு எதிர்பாகுல டா "


"டேய் அன்பு மப்புல ஒளராத அது ஷாலினி இல்ல சுவாதி டா "


"இல்ல மச்சி இது ஷாலினி தான் சுவாதி இல்ல "


"டேய் அப்போ சுவாதி "


"அது போன மாசம் இது இந்த மாசம் "


"டேய் நீ க‌ல‌ட்டிவிடுல‌ அவுங்க‌ தான் உன்ன‌ க‌ல‌ட்டி விடுறாங்க‌"


"ந‌ம்ம‌ எல்லாம் சிங்க‌ம் டா",


"அதுக்கு",


"சிங்கிளா தான் இருப்போம்",


"எவ்ளோ நாள்?, ஆள் சிக்க‌ வ‌ரைக்கும்", என்று சொல்லி க‌வ‌லைக‌ள் ம‌ற‌ந்து சிரித்து, க‌விழ்ந்த‌ன‌ர் ந‌ம் சிங்க‌ங்க‌ள்.


----------------சுபம் ------------------------------


இது சும்மா ஒரு ஜாலிக்காக சந்தோசமா இருக்க தான் போஸ்ட் பண்ணினேன் . இதில் வரும் அனைத்தும் கற்பனை தான். நீங்களே எதுவும் கற்பனை பண்ண வேண்டாம் . இந்த மொக்கைனு பீல் பண்ணினா நான் எதுவும் பண்ண முடியாது அதுக்கு தான் எழுதினேன்.

Saturday, February 28, 2009

இது தான் காதலா ?

பூக்கள் மரத்தில் இருந்து உதிர்ந்து சாலையினை முத்தமிடும் மாலை நேரம் ....


ஆம் , சுமார் ஒரு 6.30. மணி இருக்கும் ....

ரகுவும், வந்தனாவும் சாலை ஓர பூங்காவின் புற்தரையில் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் மனதில் பறந்து கொண்டிருந்தனர் .

அந்த நேரத்தில் நம்ம ரகுவுக்கு மனதில் அவன் கண்ணதாசன் என்று நினைப்பு வேறு . இதோ பாருங்க அவரோட வார்த்தை விளையாட்ட
"முதலில் உறவு கொண்டு உயிராக பலர் முயற்சித்த, போது
நீ என் உயிராகி உறவாக போறவள்"
என்று வந்தனாவின் கைகளை பற்றினான் ரகு. (இவனுக்கு உள்ள ஏதோ ஒன்று இருந்திருக்கு பாருங்க . வந்தனா ரகுவிற்காக அவ‌ன் வீட்டார் பார்த்த பெண் . அதை இப்படி கவிதை நடையில் சொல்றாருங்க .)


"நீ எனக்கு கிடைப்பாய் என்று சத்தியமாய் தெரியாது, ஆனால் ஏதோ ஒன்று சொல்லி கொண்டிருந்தது. அதனால் தானோ நான் யார் பின்பும் சுற்றித் திரிய வில்லை". ("சுற்றி இருந்தால் மட்டும் உன் அப்பா உன்னை விடுவாரா ?" என்று ரகுவின் மனசாட்சியின் உறுத்தல் வேறு .)

தானும் ரகு கிடைப்பதற்கே காத்து கொண்டிருந்தாள் என்பதை ஆமோதிப்பது போல் வெட்கத்தில் தலை குனிந்து, ஏற்கனவே ரகுவின் கையுடன் பிணைந்திருந்த தன் கையை இறுகி கொண்டாள்.

மேடை பேச்சு என்றாலே, பேசுகிறேன் என்று சொல்லி மேடையில் பேச்சை பிதற்றிவிட்டு நாட்டியம் ஆடும் ரகு இன்று சொற்பொழிவு ஆற்ற பிறந்தவன் போல் வீரனடையுடன் வந்தனாவின் கை பற்றி நடந்தான். (ஒரு பொண்ணு பக்கத்தில் இருந்தாலே நம்ம பயலுங்க ஹீரோ, கை வேற பிடிச்சு நடந்தா சூப்பர் ஸ்டார் தான் சொல்லவே வேண்டாம்.)


சற்றே இருந்த மௌனத்திற்கு பின் ரகு தொடர்ந்தான்.

"நாம் இது வரை உரையாடியதில் எல்லாவற்றையும் உன்னிடன் சொல்லவில்லை."

ஆனால், "இன்றே ! என் 27 வருட வாழ்க்கையை உன்னிடம் ச‌ம‌ர்பித்துவிடுகிறேன்."

"என்னைப் பற்றி நல்ல விஷயங்களை என் அப்பாவும் அம்மாவும் உன்னிடன் சொல்லி இருப்பாங்க அதனால் என்னை பற்றி சில கெட்ட (நல்லவை இல்லாத) விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்", என்று ரகு சொல்லி முடிக்கும் முன்பே வந்தனாவின் முகம் சற்று வாடியது போல் ஆனது.


"பதறும் விஷயம் இல்லை அப்படி மோசமான விஷயங்களை இதுவரை நான் செய்ததும் இல்லை", என்றான் . சற்று மெல்லிய புன்னகை பூத்தாள். சரி வந்தனா, "நான் என்னை பற்றி சொல்றதுக்கு முன்னாடி இந்த செந்தமிழ் மொழில பேசுறத கொஞ்சம் நிறுத்திக்குறேன், என்னால முடியல", என்று அப்பாவி சிரிப்பு சிரிச்சான். வந்தனாவின் தலை அதை ஆமோதிப்பது போல் அசைந்தது ஆனால் அவள் கண்கள் அவனது அசட்டு சிரிப்பையும் முகத்தையும் ரசித்துக் கொண்டிருந்த‌து.

"காலேஜ் படிக்கும் போது பசங்க வற்புறுத்தி ஒரு இரண்டு தடவ தம் அடிச்சேன் எனக்கு பிடிக்காம தான். சத்தியமா அதுக்கு அப்புறம் அடிச்சது இல்ல இனிமேல் அடிக்கும் எண்ணமும் இல்ல" என்று சத்திய பிரமாணம் எடுத்தான் . ஐந்து நிமிடங்களுக்கு முன் பிரிந்த இருவர் கைகளும் சேர்ந்தது ஆம், "நீ செய்தது தப்பு இல்லை" என்று சொல்வது போல் வந்தனா ரகுவின் கை பற்றினாள்.

அப்புறம் என்று இழுத்தான் ரகு, சற்றே சந்தேக பார்வையுடன் பார்த்தாள். "பெருசா ஒன்னும் இல்ல, அப்போ அப்போ பசங்களோட பீர் அடிப்பேன். ஆனா எப்பவாவுது தான்", என்று தன் குற்றத்தை வாதாடினான்.

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேண்டாம்னு சொன்ன அத தொட கூட மாட்டேன். நீ சரின்னு சொன்ன அப்போ அப்போ லைட்டா அடிசுக்குவேன்", என்ன சொல்ற ? என்று நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்கும் கைதி போல் ஏங்கி நின்றான் .

"எப்பவாவது பார்ட்டி எதாவுது விசேஷம் இருந்தா லைட்டா சாப்பிடுங்க நான் எதுவும் சொல்லுல ஆனா லிமிட் தாண்ட கூடாது" என்று அன்புக் கட்டளையிட்டாள் . வெற்றி புன்னகை பூத்தான் ரகு. சேர்ந்து இருந்த இருவரது கையும் மீண்டும் இறுகியது.

"நீங்க இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணினதே இல்லையா?", என்று தன் கேள்வியை மென்று விழுங்கினாள்.

இதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம். "நான் சைட்டே அடிச்சது இல்ல, அப்படின்னு சொல்றதுக்கு நான் சாமியார் இல்ல". "சைட் அடிப்பேன் ஆனா யாரையும் காதலிக்குல", என்று வீர வசனம் உரைத்தான் .

ஏன்? என்று வந்தனா கேட்க நினைக்கும் முன்பே தான் யாரையும் காதலிக்காத காரணத்தை சொன்னான்.

"சைட் அடிக்க ஒரு பொண்ண கண்ணுக்கு பிடிக்கணும் ஆனா லவ் பண்ண மனசுக்கு பிடிக்கணும், அப்படி என்னோட மனசுக்கு பிடிச்சவ நீ மட்டும் தான்". (அடிச்சான் பாருங்க வசனத்தை நம்ம பயலுக கெட்டிகாரங்க ).

"இது சும்மா சொல்லல என் நெஞ்சத்தின் வார்த்தைகள்", என்று முடிப்பதற்குள் வெட்கத்துடன் குனிந்த வந்தனாவின் தலை , உலகை வென்றவன் போல் தலை நிமிர்ந்தான் ரகு .

"ஆமா, நீ என்ன பிடிச்சு தானா சம்மதம் சொன்ன?", என்று ரகு கேட்டு முடிக்கும் முன் ஆம் என்று தலை அசைத்தாள் வந்தனா . (இது தாங்க நம்ம தமிழ்நாட்டு பொண்ணுங்க உங்கள மிஞ்சிட யாரு )

இருவரும் சொர்கத்தை அப்பூங்காவில் உணர்ந்தனர் . கரங்கள் இணைந்தன , பாதகங்கள் உரசின, புன்னகை பூப்பது போல் அசடு வழிந்தனர் .

அப்படி மிதந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் , "டேய் ரகு டைம் என்ன ஆச்சு தெரியுமா ஆபிசுக்கு போலியா உங்க அப்பா அனுபிச்ச ஈ‍-மெயில‌ எவ்ளோ நேரம் தான் பார்த்துடே இருக்க போற " என்று ரகுவின் நண்பன் சிவா சொல்லிய பின்பே ரகு சுயநினைவிற்கு வந்தான். (ஆமா அவுங்க அப்பா எப்பவோ அனுபிச்ச ஈ‍-மெயில‌ பார்த்து கனவு கண்டு கொண்டிருந்தான் ரகு, அதுல தான் வந்தனாவோட போட்டோ இருக்கு, நிச்சயம் முடிஞ்சு மூன்று மாசமா போன் மூலமா தான் பேசிட்டு இருக்காரு )

"மச்சி என்னமோ உலகின் மகிழ்ச்சியான மனுஷன் போல ஒரு உணர்வு டா." "இது தான் காதலா?" என்று வழிந்தான் ரகு .

சிவா அமைதியா, "மச்சி நான் ஒன்னு சொல்லட்டுமா?"

" என்னடா தத்துவமா?"

"அதே தான் டா."

"சரி சொல்லு."

"கிடைக்குற‌து கிடைக்காம‌ இருக்காது; கிடைக்காம‌ இருக்குறது கிடைக்காது" .

"சரி அதுனால என்ன சொல்ல வர ?"

"அவுங்க உனக்கு கிடைப்பாங்க", இதை சிவா சொல்லி முடிகுல ரகு தனது மேலதிகாரிக்கு போன் போட்டான் லீவு சொல்லிட்டு வந்தனாவை பார்க்க போக டிக்கெட் புக் பண்ணினான்.

இது தான் காதலா ? இதே தான் .

"காண்பவள் எல்லாம் காதலி இல்லை; உன்னை கவர்ந்தவளே காதலி "

Thursday, February 26, 2009

Just For Her

I am writing this story just to entertain you folks. All the characters in the story are completely imaginary. Any resemblance to real characters is a mere coincidence.

Get Set Go………

Will Padmaja allow me to have beer after marriage? Because, when we friends go for an outing, we used to have some beer. Let’s see if she opposees, I will have to quit that, what else I can do?

What if she wants to work after marriage? Let her go, no issues. At this point of time it would be a big boost to the family income. Also she can be independent.

Should I accept the onsite proposal? If she asks me to postpone it, what you will do Raghu? No problem, I have informed the company earlier itself.

Will she get the transfer after marriage or should I apply for it? We should have a clear discussion prior to the marriage itself. Also, my parents have already given their green signal to our love.

Will she like if I call her in the night or will it be a disturbance for her?

She writes poems and stories, if she asks me to read and tell me opinion about it, what I will do? No other goes, next two months I should get as many number of books as possible on poems and stories and make it a practice. After all, practice makes a man perfect.

Whether she likes Saree or Chudi? What would the apt thing to gift her? Sure If I go on thinking this I will become a mental soon.

Will her parents accept my love? I should try to convince them. As a consultant cant I convince them. If I can’t convince them, why I should be in consulting?

Will Shalini complain about me to Padmaja? I have once rejected her proposal. If she complains, how should I deal it? Stop this crap man. Shalini is a decent girl da, she won’t even think about such an activity.

Why should I get confused on thinking on the marriage date, let our parents decide on that. What do u say?

Also for the marriage will any of our relatives discuss about the caste? I don’t think so, because nowadays are all getting more matured. So, no need to worry, Raghu.

All these things, sorry craps were discussed by Raghu with himself. If I say when the discussion took place, that will be the highlight.

Ya, all this was just after sending an Orkut friend request to Padmaja. And Raghu doesn’t even know if Padmaja knows him?

He did all this just for her.

Thanks for reading the blog. If u got bored, what else can you do after reading it.

Wednesday, February 18, 2009

EGO - Exit of Golden Opportunity

Actually I was looking for a topic to put up in my blog, and I ended up deciding the title 'EGO'. I am not a pro in English so I searched in a dictionary, the meaning of EGO, so that I can put up something to share with you people. When I searched in an online dictionary it said "An exaggerated sense of self-importance; conceit" and "Appropriate pride in oneself; self-esteem".

Whatever the dictionaries and scholars say, for me EGO is the Exit of Golden Opportunity. Obviously, when you have an EGO, that will be the exit gate for your opportunities letting all your chances wasted.

Certainly everyone has some Egoism in them. Only sometimes, that too rarely, EGO will lead to a success. As an optimist, I would like to discuss some of the rare success stories. Some tasks may be really impossible for us, but a certain Ego in us will lead us to complete the task and attain a peak in our life. After reaching the next step in our life we should leave the EGO behind us, or we will be stagnant in that position. Since I oppose Adamant Egoism I don't want to discuss more on the few merits on EGO.

EGO not only lets you down in life but also destructs your environment and the nature. Let me discuss with you some different things I know. In a state, Ruling party will have EGO with opposition party they won't turn to their suggestions. Also Opposition party will try to complain the ruling party always, instead of cooperating with them and getting valuable plans for the people. Result, ruling party will be the opposition in the next election and same nature of opposition will be imposed on the ruling party. The particular state won't have any development in the end. This kind of Egoism will cause loss to a huge mass of the people.

During school days people used to have the 'topper' EGO. That is common between the school students because they are in the learning stage. They used to fight for silly things and they used to get them solved by themselves. All these kind of characters change once they enter into the college. Because college is the place where we learn things needed for living a pleasant life. But again, ego makes college life struggling. Perhaps school is the place to study and to build a solid foundation for our higher studies.

Let's keep the philosophical points aside; we will discuss the normal things that happen in our life. There is even more influence of ego in the friendship between people. This kind ego raises the questions like, "How come I am inferior to him/her?" in them. Because of the ego these questions keep on affecting the friendship and eventually people lose their friends.

If a person finds right person or lovable person to share life, they won't reveal it immediatly. Because of some unnecessary ego, they won't tell the other person about their interest. Though both of them have interests on each other they don't reveal their love. That's why I had mentioned early in the passage that EGO means the "Exit of Golden Opportunity".

Because of the ego we lose opportunities, partners, positions, people and many more important things in our life, and what else. Let's kill the ego in us and give a try to be a lovable and approachable person to others.

I don't have any intention to force this message to the readers, I just want to share my views which I came across in my life.

Monday, February 16, 2009

பாரம்

ஷாலினி எதையும் சாதுர்யமாக செய்யும் எண்ணம் கொண்டவள் . அவளது பாட்டி கமலம்மாவிடம் பள்ளி முடித்த விடுமுறையில் சமையல் கற்று கொண்டாள். அப்படியே விட்டுவிடவில்லை கல்லூரியில் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தன் ச‌மைய‌ல் சுவையை நிரூபித்தாள். படிப்பிலும் சுட்டி கல்லூரி முடித்து விட்டு சாப்ட்வேர் வேலையுடன் தனது சம்பாத்தியம் துவங்கினாள்.

அவள் தனது செலவிற்கே வேலைக்கு சேர்ந்தாள் என்று குழம்ப வேண்டாம், தனது சம்பாத்தியம் தனது திருமணத்திற்கு பெற்றோருக்கு உதவும் என்றே வேலை செய்ய துவங்கினாள். அவள் நினைத்தவாறே திருமணம் நல்ல இடத்தில் நிச்சயக்கப்பட்டு நன்றே நடந்தது.

ஷாலினியின் கணவன் ரகுவும் சாப்ட்வேர் துறையில் வேலை செய்கிறார். இன்றைய சூழ்நிலையின் கைதியாக ஷாலினி திருமணம் முடிந்தும் வேலையை தொடர்ந்தாள். அவள் கல்லூரி படிக்கும் போது தனக்கு தானே எடுத்த சத்திய பிரமாணம், திருமணத்திற்கு பிறகு வேலை செய்வதில்லை என்றே , ஏனெனில் அவள் தனது கணவனுக்கும் குழந்தைக்கும் வாழ்வதே வாழ்க்கை என்று இருந்தாள் . அது இப்போது முடியவில்லை இதை பாரமாக அவள் நினைத்து இருக்கும் வேலையில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது .

தனது நிறுவனத்தில் அவளுக்கு அளித்த மூன்று மாத விடுமுறை முடிந்தது தன் மகனுக்கு இரண்டு மாதம் மட்டுமே தாய் பால் கொடுத்துவிட்டு செல்ல வேண்டியது , இதுவும் அவளுக்கு பாரம் ஆனது. பள்ளி செல்ல துவ‌ங்கினான் ஷாலினியின் ம‌க‌ன் ஷ‌க்தி. அவளை போலவே ஷ‌க்தியும் கெட்டிக்கார‌ன் தனது பள்ளி ஆண்டு விழாவில் அவன் வாங்கும் ப‌ரிசுக‌ளை காண‌ ர‌குவையும் ஷாலினியையும் க‌ல‌ந்து கொள்ள‌ அன்போடு க‌ட்ட‌ளையிட்டான் இருவ‌ராலும் போக‌ இய‌ல‌வில்லை.

‌க்தி ச‌ற்று ய‌தார்த்த‌ உள்ள‌ம் கொண்ட‌வ‌ன் அத‌னால் வ‌ருந்த‌வில்லை. இதுவும் ஷாலினிக்கு ஒரு பார‌மாக‌வே ஆன‌து. ஷ‌க்தியும் த‌ன் பெற்றோர் நிலையினை உண‌ர்ந்து வ‌ள‌ர்ந்தான். ம‌க‌னை த‌ன் கையால் வ‌ளர்க்க‌ இய‌லாத‌ பார‌ம் ஷாலினியை உருத்திய‌து. ஷாலினியால் அவ‌ளை அமைதிப‌டுத்தி கொள்ள‌ முடிய‌வில்லை.

இறுதியில் ஷ‌க்திக்கு திரும‌ண‌ வ‌ய‌து நெருங்கிய‌தும் பெண் பார்க்க‌ துவ‌ங்கினாள் அவ‌ளால் உல‌க‌ம் செல்லும் வேக‌த்தை க‌ண்டு விய‌க்க‌ ம‌ட்டுமே முடிந்த‌து. அவ‌ள் வாய் அடைத்து விடும் வித‌மாக‌ ஷ‌க்தி அவ‌னுக்கு ஏற்ற‌ பெண்ணை ஷாலினியின் முன் நிறுத்தினான். ம‌க‌னின் முடிவிற்கு பச்சை கொடி காட்டி விட்டாள் ஆம் அவ‌ளால் த‌ன் ம‌க‌னின் வாழ்க்கையை ப‌ராம‌ரிக்காவிட்டாலும் பார‌மாக‌ இருக்க‌ விரும்ப‌வில்லை. ஆசீர்வ‌தித்து விட்டு த‌ன் குற்ற‌த்தை பார‌மாக‌ வைத்து கொண்டாள்.

ந‌‌ம்மை பூமியில் தாங்கும் பெண் தெய்வ‌ம் பூமாதேவி ம‌ட்டும் பார‌ம் சும‌ப்ப‌தில்லை. த‌னது உயிர் போல் த‌ன் வ‌யிற்றில் உயிர்க‌ளை சும‌க்கும் ஒவ்வொரு பெண்ணும் தெய்வ‌மே. ந‌ம்மை பார‌மென‌ க‌ருதாம‌ல் உயிராக்கிய‌ தாயின் ம‌ன‌தில் பார‌த்தினை, சூரிய‌னை க‌ண்டு உருகும் ப‌னியை போல் உருக்கி. உய‌ர்ந்திடுவோம் வாழ்வில்.

பூமியில் காட்சி த‌ரும் தெய்வ‌மே தாய்!!!

Tuesday, January 20, 2009

Nothing Else MY DREAM

Couple of weeks ago, I had scribbled a poem in my sitharalgal blog, I thought it will be good if i wrote an English version of that. Those who liked that one please don't expect the same feel here, but I am trying my best to get the same essence here. The following lines came as a result of my dream when i thought about my future.

You may think that during this recession period we can't even imagine the things that will happen in the next second , then how i can dream about my future. Even i know that, but this dream is about my gal. 3-4 years down the lane I may lose my 'bachelor' degree. But the things which I dreamt now will still be there in my heart. Dreaming is the best and the loveliest job which we, certainly I, can always do. Let me share my dream.

I don't know whether she is short or tall, I am not even sure if she is dark or fair. I think, I never met her till now, but one day i will meet her for sure. I just know that she is mine and only mine. I told her, "Dear, I am even ready to part away from you..." well, you might think "He still didn't find out his gal and how come he is ready to leave her alone". I continued, "Ya, i am ready, but only when my life parts away from my body..." .

"You might have dreamt of holding my hand to spend the rest of your life. But i am just pushing my life with the confidence that you are still holding my hands..." These are the lines which i am dedicating to my better half.

I swear i don't know who she is, but she is everything for me. Without knowing a gal how can you dream of her ???, probably this would be the question which arises for every reader. For a dream you do not need a structure, just the sense makes it sensible.

Sometime from now you are going to be mine, but i am not longing for that. I know for sure you will be mine and i am happy dreaming about it now.

My Dear you will be for me. What more do I need........

Thanks for reading my blog and for your patience.........

Keep Smiling.....

Sunday, January 18, 2009

புகழாரம்

கந்தசாமி, மனிதருள் மாணிக்கம் ! இப்படி ஒரு மனுஷன் நம்ம காலத்துல வாழ்ந்து இருக்கிறது நமக்கு பெருமை தர கூடிய விஷயம் . அவர் பள்ளிகளுக்கு வழங்காத நன்கொடையா ? அவர் நடத்தி வைக்காத திருமணமா ? தன்னுடைய பெற்றோரை கடைசி காலத்துல பார்க்க முடியாமல் இறைவன் அவனிடம் இழுத்துக் கொண்டதால் முதியோர் இல்லம் தொடங்கி பெரியவர்களுக்கு பணிவிடை செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கந்தசாமி ஐயா !
நம்ம ஊர் கோயில் வீதியில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு இவரே நன்கொடை தந்து கோயிலை பிரம்மாண்ட வடிவில் கட்டியமைத்து மக்களுக்கு மன நிம்மதி அளித்தவர். சென்ற ஆண்டு அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு தங்க கிரீடம் அளித்து கம்பீரம் சேர்த்தவர் . இன்று நம்ம ஊருக்கு நல்ல சாலை , பேருந்து நிலையம் இப்படி எல்லாம் வந்து இருக்கிறதற்கு கந்தசாமி ஐயா தயவு தான் . சென்ற தேர்தலின் போது மக்கள் வற்புறுத்தியும் தேர்தலில் போட்டியிடவில்லை . சேவை பலவற்றை செய்கிறேன் பதவி தேவை இல்லை அப்படி மக்களுக்கு பதில் அளித்தார் .
செல்லையாவும் முத்தையாவும் இப்படி பேசிக் கொண்டு நடந்ததை கந்தசாமியின் வேலைக்காரன் முருகையன் வியப்புடன் பார்த்து நடந்து வந்தான் . ஆம் ! இதே இருவரும் தான் சென்ற மாதம் கந்தசாமி ஐயாவையும் அவர் வீட்டு வேலைகாரியையும் தனது மனைவியான முனியம்மாவையும் தவறாக பேசிய அதே நாக்கு கொண்ட நரிகள் இப்படி பாராட்டியதை கண்டு வியந்தான் . நரம்பில்லா நாக்கு நியாயம் அறியாது போல என்று தனக்கு தானே நினைத்து கொண்டான் முருகையன் . தனது முதலாளி மேல் மரியாதையும் மனைவி மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் கூறிய குற்றத்திற்கு செவி சாய்க்கவில்லை .

செல்லையாவும் முத்தையாவும் மேலும் தொடர்ந்தனர் , இறைவன் நல்லவர்களை சோதிப்பது சகஜம் ஆகிவிட்டது . ஆம் கந்தசாமி ஐயாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை அதன் வருத்தத்தை அவர் உள்ளே வைத்து பல பெற்றோர் அற்ற தெய்வத்தின் குழந்தையை தெய்வமாக இருந்து வளர்த்து வந்தார் . இனி அந்த புண்ணியவதி புஷப்பவல்லி எப்படி காலம் கடத்த போறாரோ ? என்று கந்தசாமி ஐயாவுக்கு புகழாரம் சூட்டி கொண்டு நடந்து வந்தனர் .
ஆம் ! இந்த இருவர் மட்டும் அல்ல இவர்களை போல் இப்படி பலரும் கலந்து உரையாடி கொண்டிருந்தது கந்தசாமியின் இறுதி ஊர்வலத்தில் . ஆம் ! என்று தான் இவ்வுலகம் இருக்கும் போது புகழ்ந்தது ? . அவரது இறுதி ஊர்வலத்திலாவது அவருக்கு கிடைக்க வேண்டிய புகழாரம் கிடைத்ததில் அவரை நன்கு அறிந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சியே !