Thursday, August 7, 2008

விவாதம் - மனதில்

தமிழ் அமுதினை அகமகிழ அள்ளி தெளித்து

கயல்விழிகள் கரையும் அளவில் ஆராய்ந்து

கவிதையினை பாடலாக அளிப்போர் பலர் ;

சிலரே வசனமளிப்பர் ; சிலருள் ஒருவனாக

உரையாடலை விவாதம் ஆக்க முயற்சிக்கிறேன் ;

தோழன்:

உயிரினை காதலில் கரைத்து கடிதத்தில்

மடித்து வைத்துள்ளேன் . என் காதலியின்

காது பட என் காதலை பாடிவிட்டு வருவாயா நீ?

தோழி:

உனக்கு காதலியாக காட்சியளிப்பேன் என்றிருந்தேன் ,

தோழியாக உனக்கு உதவ சொல்கிறாய் ! என்ன செய்வேன் ?

தோழியாக அறிமுகமானது என் தவறே !

தோழன் :

கரு கொண்டவள் கருவில் கொண்டால் ,

நீ எனக்கு வழி காட்டடி ! உன் தவறை மன்னித்து

மறந்துவிட்டால் நட்பு நனைந்து கரைந்துவிட்டாலும் விடும் ;

மன்னிக்க மறந்து நினைப்பினை மறந்துவிட்டேனடி தோழி என்றென்றும் !

தோழி :

புருஷன் புரிந்து கொண்டாலே பெண்களின்

வாழ்வுதனில் சொர்க்கம் ; மனமறிந்த நீ கிடைத்தால்

அச்சொர்க்கத்தை தேடி செல்வது

போல என்று தான் ஒரு சுயநலம் ;

தோழன் :

அடி மதி இல்லாதவளே ! என் இதயத்தில்

இருப்பது தான் உன் ஆசை ! என் இதயமே நீ என்கிறேன் ;

தோழி என்பதால் என் ஜீவனாக ;

ஜீவிக்க ஆசையா ? என் ஜீவனை காத்தருளும் சுவாசம்

நீயடி! என் தோழி ஆனதால் .

தோழி :

நீ சொல்வது சரிதானடா ஆனால் உன் காதலி மீது

பொறாமை தான் நானும் பெண் அல்லவா !

இருக்கத்தானே செய்யும் ; உன் காதல் தோல்வியுற்றால்

உயிரை விடும் முதல் ஆள் நான் தான் நினைவில் இருக்கட்டும்.

தோழன் :

சரி நில்லடி ஒன்றை கவனித்தாயா ? சில காதல்

தோல்வியுறும் ஆனால் அனைத்து நட்பும் சில சமயத்தில்

பிரிவு தான் அடையும் ; பிரிவு ஈருயிர்க்கு ; நாம் ஓருயிர்

அல்லவா ! நமக்கு பிரிவேது ;

தோழி :

நீ சொல்வது சரி தான் என்னை தேவதையாக எண்ணினாய்

சராசரி பெண்ணாக காட்டிவிட்டேன் ; மன்னிப்பு கேட்க

மாட்டேன் உன்னிடம் ; உனக்கு அறவே பிடிக்காது என்பதை

அறிந்தவள் உன் தோழி ! சரி உன் காதலை மட்டும் அல்லாமல்

உன்னை பற்றியும் சொல்லி பிரிவில்லா நம் நட்பு போல தோல்வி

அடையாது உன் காதல் என்பதை உறுதி செய்கிறேன் ;சரியா ?

தோழன் :

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதில்லை ;

பெண்கள் இருகிறார்கள் ! பூமியை ஆழ்வது பஞ்ச பூதங்கள்

எனக்கு மனிதனை ஆழ்வது ஐந்து விரலாக இருக்கும் ,

மாதா, பிதா , குரு, தெய்வம் , நட்பு ஆகியவையே , இவை அனைத்தையும்

சொல்லிவிட்டு அவளைப் பற்றி சொல்லவில்லை என்று நினைப்பால்

பெண்ணல்லவா ! என் கையே அவள் தான் என்று சொல்லிவிடு ;

தோழி :

தந்திரக்காரன் ! கொடுத்து வைத்தவள் உன் காதலி ;

நல்ல காதலன் கிடைத்தால் ; பெருமையடைகிறேன் !

என் உயிர் தோழன் நல்ல காதலனாக இருப்பதை கண்டு !

9 comments:

Unknown said...

ஒரு உண்மையான விவாதத்தை நேரில் கான்போது போன்று இருந்தது...நட்பிற்கும் காதலுக்கும் உள்ள இடைவெளியை சரியாக உணர்த்தி உள்ளீர்கள்

Unknown said...

ஒரு உண்மையான விவாதத்தை நேரில் கான்போது போன்று இருந்தது...நட்பிற்கும் காதலுக்கும் உள்ள இடைவெளியை சரியாக உணர்த்தி உள்ளீர்கள்

JSTHEONE said...

mikka nanri

Vapurdha said...

ஆண் பெண் இடையே உள்ள நட்பையும் காதலையும், கவிதை உரைநடையில் மிகச்சிறப்பாக படைத்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள் ....

JSTHEONE said...

mikka nanri....

Prasanna said...

natpukku puthu artham kaathalukku puthu mozhi.... wonderfull

JSTHEONE said...

nanri

Pulavar Selvaraj said...

thalaivaa.. engayooo poyuteengaa.. it s interesting.. uraiyataal avalaa easyaanaa visayam alla.. but u done excellent job.. also aganaanooru paadalai pola pissthuu kela pirukeengaaaa boss... enna molzi nadai.. excellent..

JSTHEONE said...

Ashok, Thanks a ton da.. migavum nanri da... sure i will give my best by the encouragement of u ppl...